Saturday, December 29, 2007

பிரதமருக்கு கோவணாண்டி குமுறல் கடிதம்

"மானியத்துல மண் அள்ளிப் போட்டுடாதீங்க!''
பிரதமருக்கு கோவணாண்டி குமுறல் கடிதம்

மாண்புமிகு பாரத பிரதமர் மன்மோகன் சிங் அய்யா அவர்களுக்கு, கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க!

'மானியமும், மக்கள் நலத்திட்டத்துக்கு ஒதுக்கப்படுற பணமும் போய்ச்சேர வேண்டியவங்களுக்கு சேர்றதில்ல. வழியிலயே ஆட்டயப் போட்டுடறாங்க'னு சும்மா நெத்தியடியாச் சொல்லி அசத்திப்புட்டீங்க போங்க.

''அட நாப்பது, அம்பது வருஷமா இதைத்தான நாங்களும் சொல்லிக்கிட்டு இருக்கோம். அப்பல்லாம் தெரியாத உண்மைய, இப்ப எப்படீடா கண்டுபிடிச்சுது இந்த 'சிங்'கக்குட்டினு... நம்ம ஊருக்காட்டுப் பயலுக சிலபேரு நக்கல் அடிச்சிக்கிட்டு திரியறானுங்க. 'இதுக்கும் அமெரிக்காக்காரனோட ராக்கெட் ஏதாச்சும் 'சிங்'கத்துக்கு உதவி யிருக்கும்'னு அநியாயத்துக்கும் அவனுங்க லொள்ளு பண்ணுறானுங்க.



அய்யா மகாகனம் பொருந்திய பிரதமரே, 'ஐயோ திருடன்.. ஐயோ திருடன்'னு சத்தம்போட்டா, அதை காதுல வாங்கிக்கிட்டு, 'ஐயோ திருடன்... ஐயோ திருடன்'னு ஏட்டய்யாவும் சேர்ந்துகிட்டு கூப்பாடு போட்டா எப்படியிருக்கும். அந்தக் கதையால்ல இருக்கு நீங்க கூப்பாடு போடுறது. நீங்கதான் இந்த நாட்டோட தலைமை மந்திரி. நீங்கதானே களவானித்தனங்களைக் கண்டுபிடிச்சி தண்டிக்கணும். ஆனா, நீங்களும்ல 'திருடன்... திருடன்...'னு கூப்பாடு போடுறீங்க.

சிவாஜி நடிச்ச 'தங்கப்பதக்கம்' படத்துல, 'அந்த தெய்வமே கலங்கி நின்னா, யாரால மாமா ஆறுதல் சொல்லமுடியும்'னு ஒரு ஃபேமஸான ஒரு வசனம் வரும். அதுதான்ங்க இப்ப ஞாபகத்துக்கு வருது.

ஏழை, பாழைகளுக்கும், கோவணாண்டிகளான விவசாயிகளுக்கும் அரசாங்கத்தால அஞ்சு பைசா கூட பிரயோஜனம் இல்லைங்கிறது ஊரறிஞ்ச உண்மை... உலகறிஞ்ச உண்மை. அது மானியமா இருந்தாலும் சரி... மண்ணாங்கட்டியா இருந்தாலும் சரி.

''தேனெடுத்தவன் புறங்கையை நக்காம இருப்பானா?''னு நம்ம 'திராவிடத்தம்பி'ங்க வேற அதுக்கு நல்லாவே சப்பைக்கட்டு கட்டுவாங்க. இப்பல்லாம் மொத்தத் தேனையும் குடிச்சி முடிச்சிட்டு, புறங்கையையும் கூட தேனெடுக்கறவங்களே நக்கி முடிச்சிடறாங்க. இப்படி மொத்தத்தையும் முழுங்கற வேலை ஒழுங்கா நடக்குதானு பார்க்கறதுதானே நம்ம மக்கள் பிரதிநிதிங்க பலபேரோட முழுநேர வேலையா இருக்கு. இதெல்லாம் உங்களுக்கு தெரியாம இருக்காது. ஆனாலும், 'திடுதிப்'புனு மானிய விஷயத்தை நீங்க கையில எடுத்திருக்கிறதுதான் சந்தேகத்தைக் கிளப்பிவிடுது.

அமெரிக்காவுல ஒரு நாளைக்கு மொத்தமா ஒரு பில்லியன் டாலரை, விவசாயிகளுக்கு நேரடி மானியமாவே கொடுக்கறாங்க. 'ஒரு கிலோ பருத்திக்கு ஒரு டாலர், ஒரு கறவை மாட்டுக்கு தினமும் 3 டாலர்'னு மானியத்தை அள்ளி கொடுக்கிறாரு உங்க பெரிய அண்ணன் புஷ். நீங்களோ, 'ஆடு நனையுதுனு ஓநாய் அழுத' கணக்கா... 'மானியத்தை திருடுறாங்க... மானியத்தை திங்கறாங்க'னு சொல்லிக்கிட்டே, ஒரேயடியா எல்லாத்தையும் நிறுத்திப்புடலாம்னு சதி வேலையில இறங்கிட்டீங்களோனு ஒரே யோசனையா இருக்கு.

உங்க பாஸ்... அதான் உலக வங்கிகிட்ட நீங்க புதுசா ஏதாவது கடன் கேட்டு, அதுக்கான நிபந்தனையா, 'மானியத்தையெல்லாம் நிறுத்து'னு ஏதாவது உள்ளடி வேலைக்கு தூபம் போட்டிருக்குமோனு கவலையா இருக்கு.

சரி, பாவப்பட்ட மக்களோட கையில உரிய வகையில மானியம் போய்ச்சேர வழி செய்யப்போறீங்களா... இல்ல மானியத்தைக் கூண்டோட நிறுத்தப் போறீங்களா?னு கொஞ்சம் தெளிவா சொல்லிப்புடுங்க. ஏன்னா, நீங்கள்லாம் வெளிநாட்டுக் கம்பெனிக் காரனுங்களுக்கு கதவைத் திறந்து விடறதுல குறியா இருக்கீங்க. கதவைத் திறந்துவிட்டா கூட யாராவது நம்மூரு நல்லவங்க அடைச்சுப் புடுவாங்களோனு, வாசல்ல இருக்கற நிலையையும் சேர்த்தே பேத்து எடுத்துப்புடுவீங்களோனு பயமா இருக்கு.

ஒரு பக்கம் மானியத்துல மண் அள்ளிப்போடறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டு, இன்னொரு பக்கம் இறக்குமதிங்கற இடியையும் தலையில இறக்கறீங்க. எண்ணெய், பருப்பு கோதுமைனு ஆரம்பிச்சி, இப்ப நெல்லு தலைவாசல்ல காத்துக்கிட்டு இருக்குது. போன வருஷத்துல 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உணவு தானியத்தை இறக்குமதி செஞ்சு இருக்கீங்க. இருந்தும், இந்தியாவுல 47% மக்கள் வயிறாற ஒரு வேளை கூட சாப்பிட முடியாம, பாதி பட்டினியோட படுக்கைக்கு போறதா ஜ.நா. உணவுப் பிரிவு ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வாசிக்குது. நீங்க என்னடானா, விவசாயித்துறையில 1.7% அளவுல இருந்த ஜீ.டி.பி 3.7% அளவுக்கு தாண்டிக் குதிக்குதுனு 'தையாத்தக்கா' ஆட்டம் காட்டறீங்க.

''இந்தியாவோட உணவு உற்பத்தியை எடுத்துக்கிட்டா, ஒரே ஒரு முறைதான் 212 மில்லியன் டன் அளவை தொட்டிருக்கு. இப்ப 170 மில்லியன் டன்னுல இருந்து 180 மில்லியன் டன்னுக்குள்ளேயே நொண்டி அடிச்சுக்கிட்டு இருக்குது. தனி ஒரு மனுஷனோட சாப்பாட்டை எடுத்துக்கிட்டா, ஒரு வருஷத்துக்கான உலக சராசரி 309 கிலோ. இந்தியாவுல 95-ம் வருஷம் மட்டும் 207 கிலோவை தொட்டுச்சி. இப்ப 2007-ல 186 கிலோவைத் தொட்டு 'சாதனை' புரிஞ்சிருக்கு''னு வெவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க. இதைக் கேக்கறதுக்கே கேவலமா இல்லீங்களா..?

'அட இதுக்கெல்லாம் கேவலம் பார்த்தா, பிரதான் மந்திரியா இருக்கமுடியுமா'னு நீங்க முணுமுணுக்கறது நல்லாவே கேக்குது.

நம்ம நிதி அமைசர் சிதம்பரம் அய்யா, ஒரே ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத்திரும்ப முனகிக்கிட்டே இருக்கறாராம். அந்தக் கெரகம் பிடிச்ச எங்க ஊரு இங்கிலீஷ் வாத்தியாரு அதைச் சொல்லிக்கிட்டே இருந்தாரு. ஆனா, சமயம் பார்த்து மறந்துபோச்சி. ஆங்... ஞாபகம் வந்துடுச்சி. 'இன்குளூசிவ்' (மிஸீநீறீusவீஸ்மீ). அதாவது, அணைச்சுக்கிட்டு, இணைச்சுக்கிட்டு வளரணும்னு சொல்றாராம் சிதம்பரம்.

ஆனா, எந்தக் கம்பெனி முதலாளியும், கோவணாண்டிகளைக் கிட்டக்கூட சேர்த்துக்கிறதே இல்லீங்களே. எக்ஸ்குளூசிவ் (ணிஜ்நீறீusவீஸ்மீ) தானுங்களே பண்ணுறாங்க. விவசாயிகளை, விவசாயத்தை விட்டு வெளியேத்துறாங்க. சிறுகுறு வியாபாரிங்கள, வியாபரத்தை விட்டு வெளியேத்துறாங்க. கைவினைத் தொழில்கள முடக்கிட்டு, தொழிலாளர்கள விரட்டியடிக்கறாங்க. விளைநிலங்களை பிடுங்கிக்கிட்டு, மக்களை ஊரைவிட்டே வெளியேத்துறாங்க.

ஆகக்கூடி எந்தக் கம்பெனியும் மக்களை இப்ப அணைச்சிக்கறதும் இல்ல, இணைச்சுக்கிறதும் இல்லீங்க. மக்களோட கஷ்டத்தைப் பார்த்துட்டு... மாவோயிஸ்ட்டுங்க... நக்ஸலைட்டுங்க தான் இப்ப மக்களோட கைகோத்துக் கிட்டிருக்காங்க. இப்போதைக்கு 15 மாநிலங்கள்ல நக்ஸலைட்டுங்கதான் இயங்கிக் கிட்டிருக்காங்க. உங்க ஆட்சி முடியறதுக்குள்ள இந்தியா முழுக்கவே நக்ஸலைட்டுகள பரப்பாம விடமாட்டீங்க போல இருக்கு.

கிரிக்கெட்டுக்கு கோச்சு தேடுற முனைப்புல ஒரு பங்கு கூட விவசாயிகளோட வேதனைகளை களையறதுக்கு காட்டுறது இல்லீங்க உங்க விவசாயத் துறை மந்திரி சரத் பவார். அப்படி இருக்கும்போது, பாவப்பட்ட ஜனங்க நக்ஸலைட்டு களோட சேராம என்ன பண்ணுவாங்க?

ஒரு குவிண்டால் கோதுமைக்கு 1,000 ரூபாய் கொடுத்தும் கூட வடக்கத்திய விவசாய நண்பர்கள், கோதுமை விவசாயத்துல அதிகம் நாட்டம் காட்டலீங்க. 'வெளிநாட்டு விஷக் கோதுமையை குவிண்டால் 1,600 ரூபாய்னு இறக்குமதி பண்ணுவாங்க. நாம உற்பத்தி பண்ற நல்ல கோதுமைக்கு வெறும் ஆயிரம்தானா?'னு வெறுத்துப் போய், வேற பக்கம் தாவிட்டாங்க.

நெல்லுக்கும் 800 ரூபாயைக் கூட தாண்டாம இறுக்கிப்புடுச்சிக்கிட்டே இருக்கீங்க. நெல்லு விவசாயிகளும் படுத்துக்கிட்டாங்கனா, அப்பத் தெரியும், அரசியலை வெச்சிக்கிட்டு ஆட்டம் போடுற அய்யாக்களோட வண்டவாளம். 'உலகமய ஆசையால இந்த நிலைமைக்கு எங்களை ஆளாக்கிட்டீங்களே?'னு ஆளாளுக்கு கல்லைத் தூக்கி எறியப்போறாங்க பாருங்க.

'உலகமயம்கறது ஏழை, மூன்றாவது நாடுகள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம். ஆயுதங்களை வைத்துதான் ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டும் என்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஆடை மாற்றம், உணவுமாற்றம் என்று கலாச்சரத்தை சிதைச்சாலே போதும்... ஒரு நாடு நாசமாகப் போய்விடும். உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியாது. யாரை எதிர்த்துப் போராடுவீர்கள். அமெரிக்காவுடன் அணுசக்தி ஓப்பந்தம் மட்டும் போட்டுவிட்டால், அதோட முடிந்து போகும் உங்க ஆட்டம்!'

-இப்பிடி அதிர்ச்சிக் குண்டை அடியேன் தூக்கிப் போடலீங்க, ரம்சே கிளார்க்னு சொல்லப்படுற அமெரிக்க வக்கீல்தான் சொல்லியிருக்காராம். இவரு சாதாரணப் பட்ட ஆள் இல்லீங்களாம். மோனிகா லெவன்ஸ்கிகிட்ட, தன்னோட கில்லாடி வேலைகளைக் காட்டின அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனையே உலுக்கி எடுத்து, மன்னிப்பு கேட்க வெச்ச மனித உரிமை வக்கீலாம். 'பாம்பறியும் பாம்பின் கால்'ங்கற மாதிரி சொந்த நாட்டோட குணாதியங்களைப் பத்தி இப்படி புட்டுப்புட்டு வெச்சிருக்காரு போல. ஆனா, உங்களுக்கு மட்டும் 'எஜமான விசுவாசம்' விட்டுப் போகலீங்க.

அய்யா, உங்க பதவி போனா, பொருளாதார நிபுணரா உலக வங்கில போய் உக்காந்துக்குவீங்க. நாங்க எங்கீங்க போவோம்?

இப்ப நிலம் ரசாயன உரத்துக்கு அடிமையாகிப் போச்சுங்க. அடுத்தாப்புல அமெரிக்க லாகிரி வஸ்துகளையும் சூதாட்ட கலாசாரத்தையும் வரவழைச்சிக்கிட்டிருக்கீங்க. இப்படியே போனா சீக்கிரமே பாரதம் பட்டுப் போயிடுமுங்க. வேணாமுங்கய்யா... விட்டுட்டுங்க. நாங்க பிழைச்சுப் போறோம்!

இப்படிக்கு
கோவணாண்டி

Sunday, December 23, 2007

மரணப் படுகுழியில் தள்ளும் தடுப்பூசிகள்

நன்றி ஹெல்த் வார இதழ்.


போதை ஊசிகளுக்கு பீதி அடையலாம். ஆனால், பாதுகாப்பு எனப்படும் தடுப்பு ஊசிகளுக்கு பயப்படவேண்டுமா என்றால், இன்றைய சூழ்நிலையில் பயந்துதான் ஆக வேண்டும். அந்த அளவிற்கு, தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம்.

அறிவியல் வளர்ச்சியின் உச்சகட்டத்தில், நோய்த் தடுப்பு என்னும் வாசகங்களை முன்னிறுத்தி, முன்பெல்லாம் இல்லாமல் இருந்த தடுப்பூசிகளை ஆய்வுகள் மற்றும் விளக்கங்கள் ஏதுமின்றி, பொதுமக்கள் மீது வலியத் திணிப்பது சரியான ஒன்றுதானா என்றால், ‘இல்லை’ என்பதுதான் அழுத்தமான ஆணித்தரமான உண்மை.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நோய்த்தடுப்பு_பாதுகாப்பு என சாதகமாகவே கேள்விப்பட்ட உங்களுக்கு, அதில் பாதிப்புகளும் இருக்கிறது என்று கூறும்போது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கக்கூடும். ஆனால், அதுதான் உண்மை. எப்படி? ஏன்? என்றெல்லாம் தடுப்பூசியின் சாதக பாதங்களை அறிந்தபின் நீங்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதொன்று.

அதற்கு என்ன ஆதாரம்?

முத்தடுப்பு (DPT) எனப்படும் தடுப்பூசியில் தொண்டை அடைப்பான் (Diptheria), கக்குவான் இருமல் (Pertussis), இரணஜன்னி (Tetanus) ஆகிய மூன்று தடுப்பு மருந்துகள் உள்ளன.

இந்த DPT தடுப்பூசியால் ஏற்படும் பின் விளைவுகள் 1750 பேரில் ஒருவருக்கு ஏற்படுத்தும். ஆனால் கக்குவானால் ஏற்படும் உயிரிழப்பு ஒரு வருடத்தில் பல மில்லியன்களில் ஒருவரே.

ஆக விஷயம் இப்படி இருக்க தடுப்பூசிகள் தேவைதானா? எனும் கேள்வி எழுவது இயற்கையே...

கக்குவானைப் பொறுத்தமட்டில் வியாதியால் ஏற்படும் இறப்பைக்காட்டிலும், தடுப்பூசிகளினால் ஏற்படும் இறப்புகள் 100 மடங்கு அதிகம்.

கணக்குப்படியே கக்குவானால் ஒரு வருடத்திற்கு ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10_க்கும் குறைவே. 1993_ம் ஆண்டு 8 பேர் தான் கக்குவானால் இறந்துள்ளனர் என்று CDC (Centre for Disease Control) அறிவித்துள்ளது.

கக்குவானால் ஏற்படும் இறப்பு விகிதம் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே 79% குறைந்துள்ளது.

இத்தடுப்பூசிகளின் காரணமாக பல குழந்தைகள் Sudden Infant Death Syndrome (SIDS) எனும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. ஒரு வருடத்திற்கு 5 லிருந்து 10,000 குழந்தைகள் இந்நோயால்இறப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலே 10 சதவீதம் தடுப்பூசி பின்விளைவுகள் தான் பதிவு செய்யப்படுகின்றன. (FDA இயக்குநர் Dr.David Pressler) மீதி 90 சதவீதம் பதிவு செய்யப்படுவதில்லை எனில் இந்திய நிலைமையை விளக்கத் தேவையில்லை.

தமிழ் நாட்டிலும் தேவாதூர் கிராமம், மதுராந்தகம், கனகவல்லி வேதகிரி தம்பதியின் 18 மாத ஆண் குழந்தை முத்தடுப்பு ஊசியின் காரணமாக சில வருடங்களுக்கு முன் இறந்துள்ளது. ஆனால், அது மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளது என தவறாக சித்திரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன் 'The Hindu' நாளிதழில் வெளிவந்த செய்தி அதிர்ச்சியூட்டியது. அயர்லாந்திலும், இங்கிலாந்திலும் கக்குவான் தடுப்பூசி, சோதனையாக பயன்படுத்தப்பட்டு (Guineapig kids, BBC Radio 4) பல குழந்தைகளின் மூளை நிரந்தரமாக பாதிக்கப்பட்டதால், இது குறித்தான விசாரணை நடத்த இரு நாட்டு அரசுகளும் முன் வந்தது செய்தியாக உள்ளது.

தடுப்பூசி கொடுக்கப்பட்டால் அது உடலில் ஆன்டிபாடி (Antibody) என்னும் புரதத்தை உண்டாக்கச் செய்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அப்புரதத்தின் விளைவாக பாதுகாப்பு கிடைக்கிறதா? என்பதில்தான் கேள்வி எழுந்துள்ளது. 1950_ல் பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் (British Medical Counsel) தொண்டை அடைப்பான் குறித்து செய்த ஆய்வில் புரதத்தின் ஆன்டிபாடி (Antibody) அளவிற்கும், பாதுகாப்பிற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதாவது புரதம் குறைவாக இருந்தும் பாதுகாப்பு இருந்ததும், புரதம் அதிகமாக இருந்த போதிலும் நோயால் பாதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

(வட ஆஸ்திரேலியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் ஒரு வித தடுப்பூசி பொருந்தும் என்பது பொய் என நிரூபிப்பதாகவே இது உள்ளது. அந்தந்த இன மக்களின் உணவு, தட்ப வெப்பநிலை, சூழல், கலாச்சார வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது.)

ஜெர்மனி

ஆண்டு 1940 1945

தொண்டை 40,000 பேர் 2,50,000 பேர்

அடைப்பான்

பாதிப்பு

குறிப்பு: தடுப்பூசி தொடங்கப்பட்ட ஆண்டு

தடுப்பூசி கொடுத்து 5 ஆண்டுகள் நிறைவு

(Don’t get stuckHannah Allen) (Vaccination Debate)

இங்கிலாந்தில் 1970_லிருந்து 1990_வரை இடைப்பட்ட காலத்தில் 2,00,000 பேர் முழுவதுமாக தடுப்பூசி கொடுக்கப்பட்டும் கக்குவானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹிரி வின் Community Disease surveillance centre, அறிவித்துள்ளது.

1979_ம் ஆண்டு ஸ்வீடன் நாடு கக்குவான் தடுப்பூசியின் திறன் மிகக் குறைவானது என உணர்ந்து அத்தடுப்பூசியை கைவிட்டது அதற்கு காரணம் 1978_ம் ஆண்டு கக்குவான் பாதிக்கப்பட்ட 5140 பேர்களில் 84 சதவீதம் பேர் அதற்கான முழுத்தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தனர் என்பதுதான்.

(British Medical Journal 283 : 6966971981).

அமெரிக்காவில் ஒரு முத்தடுப்பு ஊசியின் விலை 1982ல் 11 சென்ட் என இருந்தது. 1987ல் 11.40 டாலராக விலை ஏற்றம் செய்யப்பட்டது. தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தடுப்பூசியின் பின் விளைவுகளாக வரும் இறப்பு, மூளை பாதிப்பு உள்ளவர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்காக ஒரு ஊசிக்கு 8 டாலர் வாங்கியதன் விளைவாகவே இந்த விலையேற்றம்.

(The Vine, Issue 7, January 1994, Nambour, Qld)


1994ல் ஜூலையில் வெளிவந்த New England Journal of Medicine - ல் கக்குவானால் பாதிக்கப்பட்ட 5 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளில் 80 சதவீதம் அதற்காக முழுத் தடுப்பூசிகளும் போடப்பட்டிருந்தனர்.

இங்கிலாந்தில் சமீபமாக 30,000 பேர் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். (இவர்கள் அனைவரும் அதற்கான முழுத்தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருந்தனர்.) கலிஃபோர்னியா பல்கலை செய்த ஆய்வில் முத்தடுப்பு ஊசியின் காரணமாக ஓராண்டிற்கு 1000 குழந்தைகள் SIDS நோயால் இறக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. டாக்டர் ராபர்ட் மெண்டல்சன் (Dr. Robert Mendelsohn) எனும் குழந்தைகள் சிறப்பு நிபுணர் அமெரிக்காவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 10,000 குழந்தைகள் தடுப்பூசிகளின் காரணமாக, SIDS நோயால் இறக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

1986_ல் டாக்டர் மைக்கேல் வைனர் பி.எச்.டி. (Dr. Michael Weiner Ph:D) என்பவர் 1981_ல் இருந்து ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் தடுப்பூசிகளின் காரணமாக SIDS சைட்ஸ் (Sudden Infant Death Syndrome) வியாதியால் பலர் மடிகின்றனர் என இருந்தும், முத்தடுப்பு ஊசியால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை மேலும் ஆராய குறைந்த அளவு பணம் கூட ஒதுக்கப்படவில்லை என வேதனையுடன் கூறுகிறார்.

1995_ல் அமெரிக்க அழகி மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற ஹீதர் ஒய்ட் ஸ்பேன் என்பவர் முத்தடுப்பு (DPT) ஊசியின் காரணமாக காது கேளாமைக்கு (Hearing Loss) ஆளானார் என்பது செய்தியாக உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஜிஜி இரணஜன்னி தடுப்பூசிகள் கருக்கலைப்பு, இரத்தப்போக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் HCG(Human Chorionic Gonodotrophin) எனும் மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததால், அத்திட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு கைவிட்டுள்ளது. மேலும் சமீபத்திய 10 வருட ஆய்வில் ஜிஜி தடுப்பூசி கொடுக்கப்படாமல் இருந்தும் 1000_க்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என தெரியவந்துள்ளது.

அம்மை தடுப்பூசிகள்

(Measles தடுப்பூசி /Measles Mumps, Rubella, (MMR) தடுப்பூசிகள்.

பல மருத்துவ ஆய்வுகளில் தடுப்பூசிகளால் பலன் ஏதும் இல்லை என்பதும், அதனால் கிடைக்கும் ‘பாதுகாப்பு’ என்பது ஒரு வித மாயை தான் என்பதும் தெளிவான ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி முழுவதுமாகக் கொடுக்கப்பட்ட குழந்தைகளையும் (Measles) அம்மை நோய் தாக்கியுள்ளது என்பதையும் (Centre for Disease control) CDC தெளிவாகச் சொல்லியிருக்கிறது. 1989_ம் ஆண்டில் CDC யானது 98 சதவீதம் அம்மை தடுப்பூசி கொடுக்கப்பட்ட அமெரிக்க பள்ளிக் குழந்தைகளை அம்மைநோய் தாக்கியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் எல்லா இடங்களிலும் இதுவரை அம்மை பாதிப்பு பல வருடங்களாக இல்லாத இடங்களிலும் கூட அமெரிக்காவில் அந்நோய் பாதிப்பு தென்பட்டது என்பது தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.

CD தடுப்பூசி கொடுக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோரை அம்மை தாக்கியதால், அத்தாக்குதலுக்கு தடுப்பூசியே காரணமாகவும் இருக்கக் கூடும் என கருத்து வெளியிட்டுள்ளது.

அம்மை இறப்பு விகிதம் அம்மை தடுப்பூசி அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே, சுற்றுப்புற சுத்தம், சுகாதாரம், நல்ல உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், பிற அடிப்படை வசதிகள் கிடைத்ததன் விளைவாக 97 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அம்மை நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு தோல்வியாதிகள் எலும்பு முட்டுகளை பாதிக்கும் நாள்பட்ட வியாதிகள், சில வகை புற்றுநோய்கள் (Ovarian Cancer) அதிகம் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக நோயால் பாதிக்கப்படும்போது தான் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படுவதாக புரிந்து கொள்ள வேண்டும்.

1967_ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் கானா (Ghana) நாட்டு மக்கள் தொகையில் 96 சதவீதம் பேருக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டதன் விளைவாக, அந்நாட்டை அம்மை (Measles) நோய் இனி தாக்காது என அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை தவிடுபொடியாக்கியது. 1972ல் கானாவில் அம்மை நோய் கொள்ளை நோயாக உருவெடுத்து அதுவரை கண்டிராத அளவிற்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாம்.

(Dr.H. Albonico, MMR Vaccine Campaign in Switzerland, March 1990)

1978_ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள 30 மாநிலங்களில் செய்த பெரும் ஆய்வில், அம்மை தடுப்பூசி முழுவதுமாக கொடுக்கப்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் அதிகமானோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டது டாக்டர். மெண்டல்சன் குழந்தை சிறப்பு நிபுணரால் (The People’s Doctor) தெரிய வந்துள்ளது.

1981, பிப்ரவரியில் வெளிவந்த The Journal of the American Medical Associates கட்டுரையில் 90 சதவீதம் குழந்தை பிறப்பு நிபுணர்களும் (obstetricians) 66 சதவீதம் குழந்தை சிறப்பு நிபுணர்களும் (Paediatricians) Rubella தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துவிட்டனர் என்பதைச் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

1990_ல் The Journal of American Medical Association வெளியிட்ட கட்டுரையில் அமெரிக்காவில் 95 சதவீதம் பள்ளிக் குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி கொடுக்கப்பட்ட போதிலும், அம்மை நோய் தாக்கம் தொடர்ந்து கொள்ளை நோயாக பாதிப்பை ஏற்படுத்தியதையும், தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதன் பாதிப்புக்கு அதிகம் உள்ளானார்கள் என்பதையும் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

(JAMA 21/11/90)

இங்கிலாந்தில் 4 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொண்ட ஓர் ஆய்வில் அம்மை தடுப்பூசி போடப்பட்ட 66% சதவீத குழந்தைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

1986_ல் அமெரிக்கா Corpus

Christ(Texas) எனுமிடத்தில் அம்மை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 99% சதவீதம் பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டனர்.

Rubella தடுப்பூசி போடப்பட்ட 26 சதவீதம் குழந்தைகள் மூட்டுவலி/பாதிப்பிற்கு ஆளானார்கள் (US Science Magazine).

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்ட பல வருட தடுப்பூசி ஆய்வுகளில், அதன் பாதுகாப்பு திறன் 80_93 பேருக்கு சதவீதம் கிடைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Dr.Glen Dettman என்பவர் ஆமைவாதத்தால் (Rheumatoid Arthritis) பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 1/3 மூட்டுகளில் Rubella Virus இருப்பதை நிரூபித்து அதற்குக் காரணம் அந்த வைரஸ்/தடுப்பூசி தான் என கண்டுபிடித்துள்ளார்.

The Lancet எனும் பத்திரிக்கையானது, மேற்கு ஜெர்மனியில் மருத்துவர்கள் Mumps தடுப்பூசியால் ஏற்படும் வலிப்பு நோய் (Seizures) மூளைக்காய்ச்சல் (Meningitis) உட்பட 27 வகை பிரச்னைகளைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளனர் என்பதை செய்தியாக வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில், வருடம் ஒன்றுக்கு 30,000 பேர் புதிதாக வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும், அவர்களில் 10,000 பேர் அம்மை தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. British Medical Journals ல் (322 / 7288 / 693 / A) இந்திய விஞ்ஞானிகள் அம்மை தடுப்பூசி பயன்படுத்தியதன் விளைவாக இந்திய மக்கள் அம்மை கிருமி போன்ற வைரஸ் கிருமி (Measles like virus) தாக்கி மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளனர்.

1989 _ 91_ம் இடைப்பட்ட காலத்தில் தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த Kaiser Permaneute, Centre for Disease Control (CDC) இணைந்து தாய் தந்தையருக்கு முறையாக விளக்கங்கள் அளிக்கப்படாமல், யூகோஸ்லாவியாவில் தயாரிக்கப்பட்ட High Titre Edmonston Zagreb என்னும் அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு (1500 பேர் இவர்களில் பெரும்பாலோர், கருப்பினர் (Blacks) லத்தின (Latino) குழந்தைகள்) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரையில் கொடுக்கப்பட்டதன் விளைவாக பலர் இறந்தும் / மோசமான பாதிப்புக்கு உள்ளாகியும் உள்ளனர். இதே தடுப்பூசி மெக்சிக்கோ, ஹைட்டி, ஆப்ரிக்காவில் ஆய்வு செய்ததன் விளைவாக பல குழந்தைகள் இறந்துள்ளனர். இதனால் இத்தடுப்பூசி பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

(Dr. Alan Cantwell M.D)

பல இந்திய ஆய்வுகளில் அம்மை தடுப்பூசிகளால் ஏற்படும் பாதிப்புகள் நிரூபணம் ஆகியுள்ளது. (Sood, Kumar, Singh etal), (Sokhzy, 1991)


எனது மருத்துவமனையில் கூட சமீபமாக கொல்கத்தா நகரைச் சேர்ந்த தம்பதியினரின் 1 வயது 3 மாதக் குழந்தைக்கு அம்மை தடுப்பூசி போட்டபின், அம்மை பாதிப்பு ஏற்பட்டதை நான் பதிவு செய்துள்ளேன்.

சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அம்மைத் தடுப்பூசி போட்டால் அதனால் தூண்டப்படும் புரதத்தின் ஆன்டிபயாடிக் அளவு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. (British Medical Journal 1975, ii 583 585 Chandra R.K.) ஆக எந்த தடுப்பூசி போடு முன்னரும் தனது உரிமையை கருத்தில் கொண்டு அதன் சாதக / பாதகங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அத்தியாவசமானது. அது போடவில்லை எனில் வியாதியால் பாதிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என இருக்கும் பட்சத்தில், மாற்று எளிதான பிறவழிகள் இல்லையெனும் சமயத்திலும் மட்டுமே தடுப்பூசிகளை பயன்படுத்துவது நல்லது. தடுப்பூசி பாதுகாப்புத்திறனும், தற்காலிகமானது. அனைவருக்கும் சத்தான உணவு, சுத்தமான குடிநீர் சுத்தமான சூழல், சுற்றுப்புற சுகாதாரம் அடிப்படை வசதிகள் இருக்க இடம், உடுக்க உடை நிரந்தர வேலை மூலம் பொருளாதார பாதுகாப்பு கிடைக்கச் செய்தலே நோய் வராமல் பாதுகாப்பு நிரந்தரம் நோக்கிய பாதையாக இருக்கும். அதற்கான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தலே தடுப்பூசிகளிலிருந்து தப்பும் வழியாக அமையும். இல்லை எனில் உங்களின் மரணத்திற்கு தடுப்பூசிகளும் காரணம் என்கிற உண்மையும் உங்களோடு புதைகுழியில் மூடப்பட்டு விடும்.

Wednesday, December 19, 2007

அணு சக்தி ஒப்பந்தம் - இன்றைய நிலை

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முடிவில் காங்கிரஸ் உறுப்பினர்களை சோனியா காந்தி அழைத்தார். ‘அனைவரும் தொகுதிக்குச் செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தினார். இதன் பொருள் என்ன? இப்போதைய நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று அர்த்தம்.

பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பி.யும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி என்று அறிவித்திருக்கிறது. அவர் பாலைவனத்தில் பூத்த மலர் என்று சிவசேனா வரவேற்றிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமாரும் அதனை வழிமொழிந்திருக்கிறார்.

ஆமாம். இன்றைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டிற்கு மேல் இருக்கிறது. இப்போது தேர்தல் திணிக்கப்படுவதற்கு யார் காரணம்? இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்தான்.

வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிக் கட்சிகளின் தோள்களில் அவருடைய அரசு அமர்ந்திருக்கிறது. அவருடைய அரசு ஒரு குறைந்தபட்ச செல்ல திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டம்தான் அரசின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டி.

வெளியுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பண்டுதொட்டு நாம் பயணிக்கும் நடுநிலைக் கொள்கை வழித்தடத்தில்தான் நடைபோட வேண்டும் என்று அந்தத் திட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது. அந்தப் பாதை நமக்கும் உலகிற்கும் பண்டிட் ஜவஹர்லால் நேரு வகுத்துத் தந்த ஒளிமயமான சாலையாகும்.

ஆனால், மன்மோகன் சிங் அரசு ஆரம்பம் முதலே தடம் புரண்டது. 2005_ம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றார். அவரும் அதிபர் புஷ்ஷ§ம் மந்திராலோசனை நடத்தினர். மர்ம ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்தம் தான் இப்போது விவாதத்தில் வெந்து கொண்டிருக்கும் அணுசக்தி உடன்பாட்டின் முதல் கட்டமாகும்.

அன்றைக்கே அந்த உடன்பாட்டை நாடாளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மன்மோகன் சிங் தெரிவிக்கவில்லை. அந்த உடன்பாட்டின் அடுத்தகட்டப் பிரச்னை மீது அமெரிக்காவிலேயே விவாதங்கள் எழுந்தன. அதன் பின்னர்தான் இந்தியா விழித்துக் கொண்டது.

அந்த உடன்பாட்டை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று இதற்கு முன்னரே இடதுசாரிக் கட்சிகள் கோரின. மன்மோகன் சிங் அவைக்கு வந்தார். பிரதமருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரே ஒரு விளக்கத்தைப் படித்தார். விவாதம் நடைபெறவில்லை.

அதனால் இடதுசாரிக் கட்சிகளுக்கு சந்தேகங்கள் எழுந்தன. ‘மன்மோகன் சிங் அரசிற்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம்’ என்றன. ‘அப்படித் திரும்பப் பெற்றால் கவலையில்லை’ என்று ஆவேசம் கொண்டார் மன்மோகன் சிங்.

ஆனால், அடுத்த சில தினங்களில் ‘இந்தப் பிரச்னைக்காக இடதுசாரிக் கட்சிகளின் உறவை இழக்க விரும்பவில்லை’ என்றார் சோனியா.

இடி விழுந்தது போல் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. ‘எப்படியாவது அணுசக்தி உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று நிதிஅமைச்சர் வந்தார். முன்னாள் அமெரிக்க அமைச்சர் கிசிங்கர் வந்தார். இந்திய வம்சாவளித் தொழிலதிபர்கள் வந்தனர். காரணம், இந்த ஒப்பந்தம் எல்லா வகையிலும் அமெரிக்காவிற்குச் சாதகம் என்பதனை ஏற்கெனவே வெளியுறவு துணை அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சுருங்கச் சொன்னால், இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக்கும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இறுதி மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பால் வார்த்தது போல் இருக்கும்.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பின்னர், சோனியா காந்தியே தனது நிலையை மாற்றிக் கொண்டார். ‘இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இது தேவை’ என்றார்.

சோனியாவும் பங்கு கொண்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உடன்பாட்டின் அபாயத்தை மார்க்சிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் எடுத்துக் கூறினார். அதன் பின்னர் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ‘உடன்பாட்டை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’ என்றார்.

‘உடன்பாட்டில் சில மாறுதல்கள் தேவை’ என்று நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டலீசாரைசைக் கோரினார். இனி உடன்பாட்டைப் பரிசீலிக்க இயலாது என்று அந்த அம்மையார் தெரிவித்தார்.

இடதுசாரிக் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் நாடாளுமன்றத்திலும் மாநிலங்களவையிலும் அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பற்றி விவாதம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஏழு மணி நேரம் நடந்த விவாதத்தில் மன்மோகன் சிங் அரசு தனிமைப்பட்டது. ‘அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தேவையில்லை’ என்று பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள், ஆவேசக் குரல் எழுப்பினார்கள். இடதுசாரிக் கட்சிகளும் பி.ஜே.பி.யும் இணைந்து நின்றன.

விவாதத்தின்போது ஒரே ஒரு முறைதான் பிரதமர் மன்மோகன் சிங் எழுந்தார். ‘நாம் அணுகுண்டு சோதனை செய்வதை அமெரிக்க ஒப்பந்தம் தடை செய்யவில்லை’ என்றார்.

விவாதத்திற்கு வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் பதில் அளித்தார். ‘இடதுசாரிக் கட்சிகள் எழுப்பிய ஐயப்பாடுகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. உடன்பாடு பற்றிய ஒவ்வொரு கட்டப் பேச்சின் முடிவை மன்றத்திற்குத் தெரிவிப்போம்’ என்றார். இதன் பொருள் என்ன? இந்தியாவில் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவோம் என்பதுதானே?

குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் என்ன சொன்னார்? ‘அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை மக்கள் அமோகமாக வரவேற்கிறார்களாம். ஆகவே, அதனைச் செயல்படுத்துவோம்’ என்றார்.

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்திருந்தால் அமெரிக்க அணுசக்தி உடன்பாடு குப்பைக் கூடைக்குப் போய் இருக்கும். இந்த நிலையில், எந்த மக்கள் இந்த உடன்பாட்டை வரவேற்கிறார்கள் என்பதனை மன்மோகன் சிங் தெளிவுபடுத்தியிருக்கலாம். இந்த உடன்பாட்டை அமெரிக்க மக்கள்கூட வரவேற்கவில்லை. அமெரிக்கத் தொழிலதிபர்கள் வரவேற்கிறார்கள். காரணம், அணு உலைகளை உற்பத்தி செய்யும் அந்த நாட்டு ஆலைகளுக்கு கடந்த இருபது ஆண்டுகளாக வேலையில்லை.

அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டிற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்ட பின்னர், பின்வாங்கும் நிலையில்தான் மன்மோகன் சிங் இருந்தார். ‘இந்த உடன்பாட்டோடு வாழ்க்கை முடிந்துவிடப்போவதில்லை. பொது வாழ்வில்

ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

அதன்பின்னர் அவர் நைஜீரியா சென்றார். அங்கிருந்து அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் பேசினார். திரும்பி வந்தார். கதை திசை திரும்பியது. ‘உடன்பாட்டை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்களும் எதிர்க்கலாமா?’ என்று அவர் சரத்பவாரிடம் மன்றாடினார். லாலுவிடமும் கெஞ்சினார். அவற்றையெல்லாம் கடந்து வாஜ்பாயை, அத்வானியைச் சந்தித்தார். ‘இந்த உடன்பாட்டிற்கு நீங்கள்தானே பிள்ளையார்சுழி போட்டீர்கள். அந்த உடன்பாட்டைத்தானே செயல்படுத்த விரும்புகிறேன்’ என்றார்.

ஒரு நாட்டின் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களை வீடு தேடிச் சென்று சந்தித்து இப்படி ஆதரவு திரட்ட வேண்டுமா? அதற்குக் காரணம் அமெரிக்க நிர்ப்பந்தம் தான்.

நாடு ஏற்றுக்கொண்ட நடுநிலைக் கொள்கையிலிருந்து நழுவுகிறீர்களே என்றால், தத்துவங்களை மாற்றிக் கொள்ள தைரியம் வேண்டும் என்கிறார் மன்மோகன் சிங். சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்கிறார் சிதம்பரம். ஆமாம். கற்பை ஒதுக்கி வைத்துவிட்டு கண்ணகிக்கு சிலை எடுப்போம் என்கிறார்கள்.

புத்தாண்டு பிறந்ததும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம். பி.ஜே.பி. தமது பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டது. அப்படி காங்கிரஸ் கட்சி யாரை அறிவிக்கப் போகிறது? மன்மோகன் சிங்கையா?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்குமா?

அப்படி ஒரு நிலை வந்தால், தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் ஒரு நிலை எடுக்க வேண்டியிருக்கும். அதனைத் தவிர்ப்பதற்கு தமிழக முதல்வர், என்ன செய்யப் போகிறார்?

Monday, December 17, 2007

மருந்து விலையில் கொள்ளை

பணம் விழுங்கும் மாத்திரைகள்..!



''ஒருவர், ஒரு பேனாவை ஐந்து ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்றால் அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்..?”

''ஆறு மாதம் சிறைத் தண்டனை!''

- சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு, ரஷ்யா சென்றிருந்தபோது ஒரு பள்ளி மாணவனிடம் அவர் கேட்ட கேள்வியும், மாணவன் சொன்ன பதிலும்தான் மேலே நீங்கள் படித்தது. அநியாய வியாபாரம் தவறு என்பதை ‘பளிச்’ என்று உணர்த்தும் எளிய உதாரணம் இது!

கழுதைக்கு பெயின்ட் அடித்து குதிரை என்று விற்கும் வில்லங்க வர்த்தகர்களுக்கு இப்போதும், எப்போதும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை விற்பவர்கள் மத்தியிலும் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்!

இந்திய மருந்துப் பொருட்களின் சந்தையில், ஒரு மருந்தின் உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் தலை தட்டாமாலை சுற்றிவிடும். ஒரு ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படும் மருந்தை பத்து ரூபாய்க்கு விற்றால் அதற்குப் பெயர் பகல் கொள்ளையில்லையா..?

வருடத்துக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் புழங்கும் இந்திய பார்மா மார்க்கெட்டில் எல்லா மருந்துகளுக்கும் அரசு, அதிகபட்ச விற்பனை விலையை (எம்.ஆர்.பி.) நிர்ணயிக்கவில்லை. மொத்த சந்தை மதிப்பில் நான்கில் ஒரு பகுதி மருந்துகளுக்கு மட்டுமே அரசால் எம்.ஆர்.பி. நிர்ணயிக்கப்படுகிறது. மற்ற அனைத்து மருந்துகளும் இஷ்டம் போல விற்கப்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் லாபநோக்குடன் செயல்படுபவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.



அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ‘இந்திய மருந்துப்பொருட்கள் விலை நிர்ணய ஆணையம்’ (ழிணீtவீஷீஸீணீறீ றிலீணீக்ஷீனீணீநீமீutவீநீணீறீ றிக்ஷீவீநீவீஸீரீ கிutலீஷீக்ஷீவீtஹ்), அனைத்து-வகை மருந்துப் பொருட்களுக்கும் அதிக-பட்ச விற்பனை விலையை நிர்ணயிக்கப் போவ-தாக பேச்சுக் கிளம்பியிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான உத்தரவு வரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

சுற்றுச்-சூழலுக்கான மருத்துவர்கள் குழு (ஞிளிஷிணி) வின் உறுப்பினரான சென்னை, கல்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி மிகுந்த ஆதங்கத்துடன் நம்மிடம் பல விஷயங்களை விவரித்தார்.

''விதவிதமான நோய்கள் பெருகிவிட்டன. சிறியதோ, பெரியதோ... கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் ஒரு நோயாளி இருக்கிறார். தினமும் மருந்து உட்கொள்ளும் அளவுக்கு தீவிரமான நோயாளிகள் யாரும் இல்லை என்றாலும், அவ்வப்போது ஏற்-படும் சின்னச் சின்ன உடல்நலக் குறைவு-களுக்குச் செலவழிப்பதற்கு, ஒரு குடும்பத்-துக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது தேவைப்படுகிறது. உண்மையில் அந்த மருந்துப் பொருட்களின் விலை நூறு ரூபாயைக் கூடத் தாண்டாது. இது அதிர்ச்சி-யளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை!'' என்றவர், சில உதாரணங்களை அடுக்கினார்.

''சளி பிரச்னையைச் சரி பண்ணக்கூடிய செ ப்ட்ரியோக்ஸின் (சிமீயீtக்ஷீவீணீஜ்ஷீஸீமீ 1ரீ) என்ற ஆன்டிபயாட்டிக் ஊசி, எங்களை மாதிரியான மருத்துவர்களுக்கும், சில்லறை விற்பனை செய்யும் மெடிக்கல் ஷாப்களுக்கும் 21 ரூபாய்க்கு வருகிறது. இதன் எம்.ஆர்.பி. 100 ரூபாய்க்கும் அதிகம். கிட்டத்தட்ட 500 சதவிகிதத்துக்கும் அதிகமான லாபம் வருகிறது. இன்னொரு ஆண்டிபயாட்டிக் ஊசியான அமிகாசின் (கினீவீளீணீநீவீஸீ 500னீரீ) எங்களுக்குக் கொடுக்கப்படும் விலை 10 ரூபாய். ஆனால், இதன் எம்.ஆர்.பி. 50 ரூபாய்க்கும் மேல், அதாவது 500%&க்கும் அதிகமான லாபம்! இப்படி பெரும்பாலான மருந்துப் பொருட்கள் மிக, மிக அதிகமான விலை வைத்துதான் விற்கப்படுகிறது. இவற்றின் உற்பத்திச் செலவோடு விற்பனை விலையை ஒப்பிட்டால், லாபத்தின் சதவிகிதம் இன்னும் பல மடங்கு கூடும். சில மருந்துப் பொருட்கள், அதன் உற்பத்தி விலையைக் காட்டிலும் 3000% கூட அதிக விலை வைத்து விற்கப்படுகின்றன'' என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுத்தார்.

''இதையெல்லாம் யாரும் கண்காணிக்க முடியாதா..?'' என்று கேட்டதும் தொடர்ந்தார் டாக்டர் புகழேந்தி.

''இந்திய மருந்துச் சந்தையை, அரசின் கட்டுப்-பாட்டுக்குள் இருக்கும் மருந்து வகைகள், அரசின் கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்து வகைகள் (சிஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ & ஹிஸீநீஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ ஞிக்ஷீuரீs), உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவரின் பரிந்துரையோடு/பரிந்துரை-யின்றி கொடுக்கக்கூடிய மருந்துகள்.. என்று பல வகைகளாகப் பிரிக்கலாம். இதில் தன் கட்டுப்-பாட்டுக்குள் வரும் மருந்துகள் மற்-றும் உயிர்காக்கும் மருந்துகளின் விற்-பனை விலையை மட்டும்தான் அரசு நிர்ணயிக்கிறது.

ஆனால், சில வருடங்-களுக்கு முன்புவரை 200 ஆக இருந்த அந்த உயிர்காக்கும் மருந்துகளின் எண்-ணிக்கை, இன்று வெறும் 20 ஆகக் குறைந்துவிட்டது. விற்பனை விலையை அரசே நிர்ணயிப்பதால் லாபம் குறைவு என்று கருதி, சில மருந்து கம்பெனிகள் பட்டியலில் இருந்தே மருந்துகளைத் தூக்கிவிட்டன. மீதியுள்ள முக்கால்வாசி மருந்துப் பொருட்களின் விற்பனை விலையை அந்தந்த கம்பெனிகளே நிர்ணயித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அந்தத் தயாரிப்புகள்தான் ஏராளமாகச் சந்தையில் கிடைக்கின்றன'' என்றார்.

‘ஒரு பொருளைத் தயாரிப்பவரைக் காட்டிலும் அதை விற்பவருக்கு லாபம் அதிகம்’ என்பது விவசாயத் துறையைவிட மருந்துப் பொருட்களின் துறைக்கே அதிகம் பொருந்தும். மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவுக்கு லாபம் வைத்து மொத்த விற்பனையாளர்களுக்கு விற்கின்றன. அவர்களிடமிருந்து சில்லறை விற்பனையாளர்கள் வழியாக மக்களுக்குப் போகிறது. இதில் சில்லறை விற்பனை செய்யும் இடத்தில்தான் அதிக லாபம் பார்க்கிறார்கள்.

அண்மையில் இந்திய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் (ழிறிறிகி) நாடு முழுக்க பன்னிரண்டு நகரங்களில் ஓர் ஆய்வு நடத்தியது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 547 மருந்துகளில் 303 மருந்துப் பொருட்களின் விலை, அவற்றின் உற்பத்திச் செலவைவிட பலநூறு மடங்கு அதிக விலை வைத்து விற்கப்பட்டதும், 80 மருந்துகளுக்கு அரசின் அனுமதி இல்லாமலேயே அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் மருந்துப் பொருட்களின் விலை இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

டாக்டர் புகழேந்தியுடன் பேசியபோது அவர் சொன்ன இன்னொரு விஷயம் மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது!

''இப்படி தாறுமாறாக எம்.ஆர்.பி. நிர்ணயிக்கப்படுவது இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் மருந்துகளுக்கு மட்டும்தான். இதுவே வெளிநாட்டு மருந்துகள் என்றால் சில்லறை விற்பனையாளர்களுக்கு குறைந்த அளவு அதாவது நியாயமான அளவுக்கே மார்ஜின் நிர்ணயிக்கிறார்கள். உதாரணத்துக்கு, புகழ்பெற்ற நோவால்டீஸ் மருந்து நிறுவனம், சளி பிரச்னைக்கு டெக்ரிடல் (ஞிமீரீக்ஷீவீtணீறீ 200 னீரீ) என்ற மாத்திரையைத் தயாரிக்கிறது. இதன் ஒரு மாத்திரையின் விற்பனை விலை 1.26 ரூபாய். எங்களுக்கு 1.10 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால், மெடிக்கல் ஷாப்களில் இப்படியான லாபம் குறைவாகக் கிடைக்கும் மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதே இல்லை. எப்போது கேட்டாலும் இல்லை என்ற பதில்தான் வரும். ஒரு மருந்தை தனக்கு லாபம் குறைவு என்ற காரணத்தால் அதை விற்பதையே நிறுத்துவது என்பது எத்தகைய கொடுமை என்று பாருங்கள்.



இதற்கு மருத்துவர்கள் தரப்பிலும் உடந்தையாக இருக்கிறார்கள். விலை குறைவான மருந்தைக் கொடுத் தாலே நோய் சரியாகும் என்ற நிலை இருந்தாலும், எந்த மருந்து கம்பெனி தனக்குச் சலுகை தருகிறதோ, அந்த மருந்தையே நோயாளிக்குப் பரிந்துரை செய்யும் தவறை மருத்துவர்களே செய்வது கொடுமை! லாபமே பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. லாபத்துக்கும், கொள்ளை லாபத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே..?'' என்று ஆதங்கமாகக் கேட்டார் புகழேந்தி.

இந்தியாவில் இப்போது பலவித நோய்களும் போட்டிபோட்டுக்கொண்டு முன்னேறினாலும் கண்ணுக்கு தெரியாமல் பரவிக்கொண்டிருக்கும் ஒரு வியாதி ரத்தசோகை. இந்திய கர்ப்பிணி பெண்களில் 88% பேரும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 80% பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான மக்களைத் தாக்கியிருக்கும் ஒரு வியாதிக்கான மருந்தின் விலை, குறைவாக இருக்க வேண்டும் அல்லது அப்படி குறைவாக விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதன் விலை வருடத்துக்கு வருடம் ஏறிக்கொண்டே இருக்கிறது. மூன்று ஆண்டு-களுக்கு முன்பு 12.50 ரூபாயாக இருந்த ரத்தசோகைக்கான ஊசியின் விலை படிப்-படியாக ஏறி, கடந்த அக்டோபரில் 22 ரூபா-யாக உயர்ந்துவிட்டது.

ஆண்டு ஒன்றுக்கு 8&9% வளர்ச்சி அடைந்து வரும் இந்திய பார்மா மார்க்கெட்டில் 20,000&-க்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் இருக்கின்றன. ஆனாலும் 70% மருந்து விற்பனை, முன்னணியில் இருக்கும் 250 கம்பெனிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

இந்தப் பிரச்னைபற்றி ‘கன்ஸ்யூமர் அசோஸியேஷன் ஆப் இண்டியா’ அமைப்பின் அறங்காவலரான தேசிகனிடம் கேட்டோம். ''உலகத்தின் அதிகபட்ச டயாபடீஸ் நோயாளிகள் இருப்பது இந்தியாவில்தான். எய்ட்ஸ் நோயாளி-களின் எண்ணிக்கையில் நமக்குத்தான் இரண்-டாமிடம். உலக டி.பி. நோயாளி களில் 33% பேர் இந்தியர்கள். வயிற்றுப் போக்குப் பிரச்னையால் ஒவ்வொரு வருடமும் 19 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என இந்தியா நோய்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. இன்னும் ஐந்து ஆண்டு-களில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் டயா-படீஸ் நோயாளிகளாக இருப்பார்கள் என்றும், எய்ட்ஸில் முதலிடத்தை எட்டிவிடுவோம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, உலக மருந்துச் சந்தையின் டார்லிங்காக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. இப்போது 35,000 கோடிகளாக இருக்கும் இந்திய மருந்துச் சந்தையின் மதிப்பு இனிமேல் கூடிக் கொண்டேதான் போகும். ஆனால், மருந்துகளின் உண்மை-யான விலையைக் கணக்கில் கொண்டால், இந்த மதிப்பு இப்போது சொல்லப்படுவதில் பாதியளவு கூட இருக்காது. குடும்ப பட்ஜெட்டில் மருந்துக்கும் நிதி ஒதுக்கவேண்டிய இன்றைய காலத்தில், அரசு உடனடியாக மருந்துப் பொருட்களின் விலைக்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

இப்போதுள்ள விலை நிர்ணய முறையைத் தவிர்த்து, அனைத்து வகையான மருந்துகளுக்கும் ஒரே விதமான விற்பனை விலை நிர்ணயம் செய்யப்-போவதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி மொத்த விற்பனையாளர்களுக்கு 10% மார்ஜினும், சில-லறை விற்பனையாளர்களுக்கு 20% மார்ஜினும் நிர்ணயிக்-கப்படலாம். அதன் விளைவாக, எல்லா மருந்துகளின் விலையும் உடனடியாகக் குறையும் என்கிறார்கள். இது எந்த அளவுக்கு சரி என்பதை அறிய, 23,000 உறுப்பினர்களைக் கொண்ட ‘தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்க’த்தின் மாநிலச் செய-லாளர் அருள்குமாரைச் சந்தித்தோம்.

''கட்டுப்படுத்தப்பட்ட மருந்து, கட்டுப்-பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்து (சிஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ, ஹிஸீநீஷீஸீtக்ஷீஷீறீறீமீபீ ஞிக்ஷீuரீs) என்ற இரண்டு பெரிய பிரிவுகளுக்குள் ஒட்டுமொத்த இந்திய மருந்துச் சந்தையையும் அடக்கிவிடலாம். இதில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான மார்ஜின், மொத்த விற்பனையாளர்களுக்கு 8%&ஆகவும், சில்லறை வியாபாரிகளுக்கு 16%&ஆகவும் இப்போது உள்ளது. இந்த மார்ஜின் அளவு, கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ள மருந்துகளுக்கு, 10 மற்றும் 20 சதவிகிதமாக உள்-ளது. இதுதான் இப்போதைய நிலைமை. நடக்கப்போவதாகச் சொல்லப்படுகிற மாற்றம் பற்றி அரசே இன்னும் ஒரு இறுதியான முடிவு எடுத்ததாகத் தெரிய-வில்லை. மார்ஜின் லெவலைக் குறைப்பதாகச் சொல்வது எங்களை மாதிரியான வியாபாரிகளுக்கா, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கா என்பதும் தெளிவாகவில்லை'' என்றவர், வேறு சில விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

''இந்திய மருந்துச் சந்தையில் 40% கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள்தான். இவற்றின் விலையை அரசே முடிவு செய்துவிடுகிறது. மீதியுள்ள மருந்துகளின் விலை-யைத்தான் கம்பெனிகள் தீர்மானிக்கின்றன. இதில் சில்-லறை விற்பனையாளர்களுக்கு மட்டும் அதிக மார்-ஜின் நிர்ணயிக்கப்படுவது உண்மைதான். அதன் காரணம், ஒரு மெடிக்கல் ஷாப் நடத்துவதற்கான செலவுகள் மிக அதிகம் என்பதுதான். அந்த மார்ஜின் லெவலைத் தாண்டி அதாவது எம்.ஆர்.பி&யை விட அதிகமான விலைக்கு விற்றால் எங்கள் மீது தவறு சொல்லலாம். நிஜத்தில், இப்போது தெருவுக்குத் தெரு பெட்டிக்கடை போல மெடிக்கல் ஷாப்கள் வந்துவிட்டதால், வியாபாரப் போட்டி காரணமாக மார்-ஜின் லெவலைக் குறைத்துதான் எல்லோரும் விற்-கிறார்கள். மற்றபடி லாபம் குறைவாகக் கிடைக்கும் மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்வதில்லை என்ப-தெல்லாம் பொய்...'' என்றார்.

அரசு மனது வைத்து மருந்துகளின் விலையைக் குறைத்தால், நிச்சயமாக மாத பட்ஜெட்டில் பெரும் தொகை மீதமாகும். அதைக்கொண்டு இன்னும் முறையாகத் திட்டமிட்டுச் சேமித்து முதலீடு செய்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம். மனம் வைக்குமா அரசு!

Tuesday, December 4, 2007

ரயில் தொழிற்சங்க வெற்றி

ரயில்வே சங்க அங்கீகார தேர்தல் டிஆர்இயு மகத்தான வெற்றி பொன்மலை வீர தியாகிகளுக்கு சமர்ப்பணம்: டி.கே.ரங்கராஜன்

சென்னை, டிச.3-

ரயில்வே தொழிற்சங்க அங் கீகாரத்திற்கான தேர்தலில் சிஐடியு தலைமையிலான தட் சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ரகசிய வாக்கெடுப்பில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் டிஆர்இயு சங்கத்திற்கு அங்கீ காரத்தைப் பெற்றுத் தந்துள் ளனர். ஏற்கெனவே ரகசிய வாக் கெடுப்பு மூலமே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் வெற்றி பெற்ற டிஆர்இயு, தேர்தலிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள்

தெற்கு ரயில்வேயின் சி,டி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வாக்காளர் கள் ஆவர். மொத்த வாக்குகள் 98,189 ஆகும். கடந்த நவ.26, 27, 28 தேதிகளில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 92,811 வாக் குகள் (94.6 சதவீதம்) பதிவா கின. இதில் டிஆர்இயு பெற்ற வாக்குகள் 30,094 (30.64 சத வீதம்). ஏற்கெனவே நிர்வாக ஒத் துழைப்பால் அங்கீகார சங்க மாக இருந்து வந்த எஸ்ஆர் எம்யு, அரசியல் களத்தில் முத லாளித்துவ கட்சிகள் செய் வதுபோல பெரும் பணத்தை இறக்கி விட்டு 35,530 (36.18 சதவீதம்) வாக்குகளை பெற் றது. அங்கீகாரத்திற்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை யில் 30 சதவீதம் தேவை என்ற நிலையில் இந்த இரண்டு சங்கங் களும் அங்கீகாரம் பெறுகின்றன.

நிர்வாக ஒத்துழைப்போடு அங்கீகாரம் பெற்று வந்த மற் றொரு சங்கமாகிய ஐஎன்டியுசி தலைமையிலான எஸ்ஆர் இஎஸ் இத்தேர்தலில் 23,637 (24.07 சதவீதம்) வாக்குகளை மட்டுமே பெற்று தனது அங்கீ காரத்தை இழக்கிறது.

நியாயமான கோரிக்கை

ரயில்வே தொழிற்சங்க அங் கீகாரத்தை ரகசிய வாக்கெடுப்பு அடிப்படையிலேயே வழங்க வேண்டும் என்று டிஆர்இயு மட் டும்தான் வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட் டங்களையும் சங்கம் நடத்தி யது. ஆனால் ரயில்வே நிர்வா கம் இதனை ஏற்காமலே இருந் தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2003 அக்டோ பர் 17 அன்று உயர்நீதிமன்றம் ரகசிய வாக்கெடுப்பு மூலமே அங்கீகாரம் வழங்கப்பட வேண் டும் என்று தீர்ப்பளித்தது.

ரயில்வே நிர்வாகமும், எஸ்ஆர்எம்யு, எஸ்ஆர்இஎஸ் ஆகிய இரண்டு `நிர்வாக அங்கீ கார' சங்கங்களும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய் தன. அகில இந்திய அளவில் அனைத்து ரயில்வேக்களிலும் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது பொதுத் தேர்தலைப் போன்றது தான், அதனால் பெரும் பணச் செலவு ஏற்படும், மோதல்கள் ஏற்படும் என்றெல்லாம் நிர்வா கம் சாக்குப் போக்குகளைச் சொன்னது. இரண்டு `நிர்வாக அங்கீகார' சங்கங்களும் உறுப் பினர் பதிவு அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட வேண் டும் என வாதிட்டன.

உச்சநீதிமன்றம் 2004 மார்ச் 8 அன்று அளித்த முக்கி யத்துவம் வாய்ந்த தீர்ப்பில், நிர்வாகம் மற்றும் இரண்டு `நிர் வாக அங்கீகார' சங்கங்களின் வாதங்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. ரகசிய வாக்கெடுப்பு மூலமே அங்கீகாரத்திற்கான சங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டது.

முக்கிய வெற்றி

அதன் பிறகும் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் பல வகைக ளில் இழுத்தடிக்க முயற்சிகள் நடந்தன. இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. முதலில் ரகசிய வாக்கெடுப்பிற்கான கோரிக் கையில் வெற்றி பெற்ற டிஆர் இயு, மற்ற இரண்டு சங்கங் களின் பெரும் பணம், பல்வேறு உத்திகள் போன்றவற்றை எதிர் கொண்டு இந்த தேர்தல் வெற்றி யையும் சாதித்துள்ளது. அந்த சங்கங்களின் பண பலத்தோடு ஒப்பிடுகையில் சிஐடியு சார்ந்த சங்கத்திற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி மகத்தானதாகும்.

"இது தொழிலாளர்களின் வெற்றி, நியாயமான கோரிக் கைக்கான போராட்டத்தின் வெற்றி," என்று டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகி ராமன் கூறினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதி லிருந்தே டிஆர்இயு கொள்கைப் பூர்வமான பிரச்சார இயக் கத்தை தொடங்கிவிட்டது. சிஐ டியு தலைவர்கள் தமிழகம், கேர ளம், ஆந்திரா ஆகிய தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிக ளில் தொழிலாளர்களை சந் தித்து பிரச்சாரம் செய்தனர். இது வரை வேறு வழிகளில் அங்கீ காரம் பெற்று வந்த சங்கங்கள் வன்முறைகளை தூண்டக் கூடும் என்ற எதிர்பார்ப்புடன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் டிஆர்இயு கோரியது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக் கையும் நடந்தன. எனவே, இந் தத் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கும் டிஆர் இயு சங்கம்தான் காரணமானது என்று சங்கத்தின் மூத்த தலை வர் பி.வி.ராம்தாஸ் கூறினார்.

Thursday, November 22, 2007

வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?

வாய்ஜாலத்தால் ஒழியுமா வறுமை?



'நமது நாடு இப்போதைய வேகத்திலேயே வளர்ச்சிப் பாதையில் சென்றால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் வறுமையைப் பெருமளவு ஒழித்துவிடலாம்' எனப் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசிய பேச்சுதான் இது.



இப்படிப் பேசுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு திட்டக் கமிஷன் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய அவர், ''அடுத்த பத்தாண்டுகளில் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்'' என நேரெதிரான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

உணவுக்கு உத்தரவாதமில்லாத நிலைமை உருவாகும் என எச்சரித்துப் பத்தே


நாட்களில், 'வறுமை பெருமளவில் ஒழிந்துவிடும்' என்றால், எதை நம்புவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுகிறது.

திட்ட கமிஷன் கூட்டத்தில், ''உணவு உற்பத்தி அவற்றின் விலை, நமது உணவுத் தேவை ஆகியவை எல்லாம் சேர்ந்து அடிப்படையான உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் அவற்றின் விலையிலும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறது'' என எச்சரித்த பிரதமரின் பேச்சில் அவரது பொருளாதார அறிவும், கரிசனமும் வெளிப்பட்டன.

''இந்த நெருக்கடியை சமா ளிக்க வேண்டுமானால் நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேளாண்மைத் துறை செயல்பட வேண்டியது மட்டுமின்றி, சந்தையின் யதார்த்தத்துக்கு ஏற்றபடி உணவுப் பொருள் தேவையை நாம் தகவமைக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

'Ôபதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2007&2012) நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது முதல் பத்து சதவிகிதம் வரை இருக்கவேண்டும் என்கிற அதே நேரத்தில், அது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்ÕÕ என்றும் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். ''2005&ம் ஆண்டு வரை வறுமை ஒழிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை'' என்று கடந்த ஆட்சியை அவர் விமர்சித்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகான மூன்று வருடங்களில் இது தொடர்பாக அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு என்ன சாதித்திருக்கிறது என்பதை அவர் தெரிவிக்கவில்லை! ''அதுபற்றிய புள்ளிவிவரங்கள் இல்லை'' என்று அவரால் மழுப்பத்தான் முடிந்தது.

பொருளாதார மேதை யான நமது பிரதமருக்குப் புள்ளிவிவரங்களைப் பெறு வது ஒன்றும் சிரமமான வேலை இல்லை. வறுமை ஒழிப்பில் நமது நாடு எங்கே இருக்கிறது என்பதற்கான புள்ளிவிவரங்கள் தாராளமாகக் கிடைக்கவே செய்கின்றன.

வாஷிங்டனில் இருக்கும், 'உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்' ஆண்டுதோறும் அட்டவணை ஒன்றை வெளியிட்டு வருகிறது. உலகில் உள்ள நூற்றுப் பதினெட்டு வளரும் நாடுகளை மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட்டு, அந்த அட்டவணை தயாரிக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைந்த மக்களின் எண்ணிக்கை, சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவைதான் அந்த மூன்று அளவுகோல்கள்.

இந்தக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கங்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'உலக பட்டினி அட்டவணை'யில் இந்தியா தொண்ணூற்று நான்காவது இடத்தில் உள்ளது. ராணுவ சர்வாதிகாரத்தாலும், உள்நாட்டுப் போராலும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானும், இலங்கையும் இந்தியாவைவிட நல்ல நிலைமையில் தமது குடிமக்களை வைத்துள்ளன என்று அந்த அட்டவணை சொல்கிறது.

பட்டினியைக் குறைத்து வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் பாதியைக்கூட இந்தியா எட்டவில்லை என்பதை 2007&ம் ஆண்டுக்கான 'உலக பட்டினி அட்டவணை' வெளிப்படுத்தியுள்ளது.

பிரதமரின் 'ஒன்பது சதவிகித பொருளாதார வளர்ச்சி' என்பது போன்ற கவர்ச்சி அறிவிப்புகளின் பின்னால் இருளில் பதுங்கியிருக்கும் உண்மை இதுதான்! இதைச் சொல்வதற்கு கூச்சப்பட்டுக்கொண்டுதான், 'புள்ளிவிவரம் கிடைக்கவில்லை' என்று உண்மைக்கு மாறான தகவலைத் தந்திருக்கிறார் பிரதமர்.

அத்துடன் நின்றிருந்தால்கூட பரவாயில்லை. அதே காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பேசும்போது இப்படி முழங்குகிறார்&

''நாம் பார்த்துக் கொண் டிருக்கும் பொருளாதார வளர்ச்சி, ஒரு சில பகுதிகளோடு நின்றுவிடவில்லை. நமது முயற்சியின் காரணமாக வேளாண்துறையில் நான்கு சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது... உற்பத்தித் துறையில் பத்து சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது... நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறுமை ஒழிந்து வருகிறது!'' &என்ன ஒரு முரண்பாடு!

பிரதமர் மன்மோகன்சிங்கை நாடு மிகவும் மரியாதையுடன் பார்த்து வருகிறது. அவர் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்பே, ''விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதைத் தொடர முடியாது'' என்று தன் கருத்தைத் தயங்காமல் சொன்ன 'துணிச்சல்காரர்' அவர். திட்ட கமிஷன் கூட்டத்திலும் அப்படித்தான் பேசியிருந்தார். ''உணவு, உரம், பெட்ரோல் ஆகியவற்றுக்குத் தரப்படுகின்ற மானியங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த ஆண்டில் இந்த மூன்றுக்காக மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நாம் செலவிட இருக்கிறோம்'' என்று அவர் கூறியிருந்தார்.

''இந்த மானியங்களால் நமது வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவு பாதிக்கப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். இப்படி மானியங்கள் தருவதால் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை அதிகமாகத் திறக்க முடியாமல் போகிறது. கட்டமைப்பு வசதிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் போதிய முதலீடுகளைச் செய்ய முடியவில்லை. எனவே, மானியம் வழங்குவதில் இப்போ திருக்கும் ஓட்டைகளை அடைத்து... தகுதியான, ஏழை மக்களுக்கு மட்டும் அதன் பலன்கள் சென்றுசேரும் விதமாக நமது அணுகுமுறையை மாற்றியமைக்க வேண்டும்'' என்று அவர் பேசியிருந்தார்.

இன்று உலக அளவில் விவாதிக்கப்படும் பிரச்னைகளில் ஒன்றாக 'மானியம்' இருக்கிறது. உலக வர்த்தக அமைப்பு உருவானதற்குப் பிறகு, வளரும் நாடுகளின் சந்தையைக் கபளீகரம் செய்யும் உள்நோக்கத்தோடு அமெரிக்கா முதலான வல்லரசுகள் 'மானியம்' என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகின்றன. சுதந்திர வர்த்தகம் என்ற அனுகூலத்தால் உலகச் சந்தைக்குள் நுழைய வாய்ப்பு பெற்றுள்ள இந்தியா முதலான வளரும் நாடுகள், தமது விவசாய உற்பத்திப் பொருட் களைக் குறைந்த விலைக்கு விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மிகக் குறைந்த கூலி உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி செலவு இந்தியா போன்ற நாடுகளில் குறைவு. எனவே, வளர்ந்த நாடுகள் இவற்றோடு போட்டிபோட சிரமப்படுகின்றன. எனவேதான் அந்த நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஏராளமான மானியங்களை அந்த அரசாங்கங்கள் வழங்குகின்றன. முப்பது பணக்கார நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (ளிணிசிஞி)', தனது உறுப்பு நாடுகளின் அரசாங்கங்கள் விவசாய மானியங்களைக் குறைப்பதற்கு முன்வர மறுக்கின்றன என்று வெளிப்படையாகவே கூறியுள்ளது. அரிசி, சர்க்கரை, பால், ஆட்டிறைச்சி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஏராளமான மானியங்கள் தரப்படுகின்றன. அமெரிக்க அரசு ஆண்டு ஒன்றுக்கு விவசாயத் துறைக்கு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்கிக் கொண்டிருக்கிறது. பணக்கார நாடுகளின் இந்த இரட்டை அணுகுமுறையை மறைந்த முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

மானியங்களைக் குறைக்க வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை நாம் ஏற்க வேண்டியதில்லை. கூடவே, அரசு தரும் மானியங்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்வதும் முக்கியம். அந்தவிதத்தில் பிரதமரின் பேச்சு கவனிக்கத்தக்கதாகும். பொது விநியோக அமைப்பு மூலமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கும், பம்பு செட்டுகளுக்கான இலவச மின்சாரத்துக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கும் வழங்கப்படுகிற மானியத் தால் பலன் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்கள் மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஏழைகள் மிகவும் குறைவாகவே இவற்றால் பயனடைகின்றார்கள்.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த சரியான புள்ளிவிவரம் அரசிடம் கிடை யாது. அதுதான் சமாளிப்புக்கு வசதியென்று அரசாங்கம் கருதுகிறது போலும்!

இருக்கிற புள்ளிவிவரங்களைத் தனது வசதிக்கு ஏற்ப அரசு பயன்படுத்தி வருகிறது. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது (1995&96) கோபன்ஹேகனில் நடந்த 'உலக வளர்ச்சிக்கான உச்சி மாநாட்'டில் இந்தியாவில் 39.9 சதவிகிதம் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப் பதாக இந்திய அரசு தெரிவித்து, கூடுதல் நிதியுதவியை வேண்டியது. ஆனால், தேர்தல் நெருங்கிவந்த சூழலில் ஓட்டு வாங்கும் நோக்கத்தோடு, 'இந்தியாவில் 19.5 சதவிகிதம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். நாங்கள் வறுமையைப் பெருமளவில் ஒழித்து விட்டோம்' என ஊடகங்களில் ஒரு பொய்யை அதே மத்திய அரசு அவிழ்த்து விட்டது!

அப்போது மட்டுமல்ல... இன்றும்கூட அதுவேதான் அரசின் நடைமுறை! கடன் வாங்குவதற்காக ஒரு புள்ளிவிவரம், ஓட்டு வாங்குவதற்காக வேறொன்று!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கென ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாநில அரசுகள் செலவிடுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 1500 கோடி ரூபாய்க்கு மேல் இதற்கென ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது. இதனால் பயன்பெறுபவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள்தான். பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதால் அதைப் பலர் ÔதாராளமாகÕ பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் வீணாகிறது என்ற விமர்சனங்கள் உள்ளன. குடிசைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம்தான் நேரடியாக ஏழைகளுக்குப் பயன்படுவதாகும். பெட்ரோலிய பொருட்களுக்கான மானியமும்கூட நேரடியாக ஏழைகளுக்குப் பயனளிப்பதில்லை. ஆகவே இவற்றைப் பரிசீலித்து முறைப்படுத்த வேண்டும்.

நாளன்றுக்கு ஒரு டாலருக்குக் கீழ், அதாவது சுமார் நாற்பத்தைந்து ரூபாய்க்கும் கீழ் வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களாக உலக வங்கி வரையறுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, நாளன்றுக்கு பத்து ரூபாய்க்கும் கீழே வருமானம் உள்ளவர்களைத்தான் வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவர்களெனக் கூறுகிறது. இது எந்தவித நியாயத்துக்குள்ளும் வரவில்லை. எனவே வறுமைக் கோட்டை வரையறுப்பதற்கான சர்வதேச அணுகுமுறையை நமது மத்திய அரசும் பின்பற்ற வேண்டும்.

அரசாங்கங்களின் நலத்திட்டங்களின் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச்சேர வேண்டுமெனில், குடிமக்களுக்கான அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவருடைய சமூக, பொருளாதார, கல்வி தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யலாம். ஒரு அடையாள அட்டை தயாரிக்க பத்து ரூபாய் என வைத்தால்கூட, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க சுமார் 1100 கோடி தேவைப்படலாம். உள்நாட்டுப் பாதுகாப்பு உட்படப் பலவிதங் களில் பயன்படக்கூடியது என்பதால் இந்த செலவு ஒன்றும் வீணானதல்ல. அட்டை தயாரிக்கும்போது நிர்வாக மற்றும் ஊழல் காரணங்களால் தவறான விவரங்கள் பதிவாகாமல் பார்த்துக்கொள்வதுதான்முக்கியம்!

மானியங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். தகுதியான பயனாளி களைக் கண்டறிவதே அதற்குச் சரியான வழி. அடையாள அட்டைதான் இதற்கு நிரந்தரமான தீர்வு!

'வறுமையை ஒழிப்போம்' என்று காங்கிரஸ் கட்சி வெகுகாலமாகவே சொல்லி வருகிறது. வறுமை ஒழியவில்லை... காங்கிரஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது.


நன்றி ஜூனியர் விகடன், 25.11.2007 இதழ்.
கட்டுரையாளர் : ரவிக்குமார் எம்.எல்.ஏ

Thursday, November 15, 2007

123 இந்திய எதிரி

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கக் கப்பல் கொச்சித் துறைமுகம் வந்து சேர்ந்தது. அந்தக் கப்பலில் அமெரிக்கா நமக்கு பரிசுப்பொருட்களை அனுப்பியிருந்தது. துறைமுகப் பணியாளர்கள் திறந்து பார்த்தனர். துர்நாற்றத்தால் அவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்பட்டது.

தனியார் நிறுவனத்தின் பெயரால் வந்த வாசனைத் திரவியம் என்ன தெரியுமா? நியூயார்க் நகர ஓர்ஆண்டுக் குப்பைகள். அமெரிக்க மருத்துவமனைகளின் அபாயகரமான கழிவுகள். அவற்றை நமது கடலில் கொட்டுவதற்குத்தான் அந்தக் கப்பல் வந்தது. கேரள அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக அந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமாம். இந்தியாவை அமெரிக்கா தனது குப்பைத் தொட்டியாகக் கருதுகிறதா?

‘போனால் வராது. பொழுது போனால் கிடைக்காது’ என்று இப்போது அமெரிக்காவிலிருந்து அரசியல் விற்பன்னர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொழிலதிபர்கள் மட்டுமல்ல, வியாபாரிகளும் கூட.

அவர்கள் எதற்காக அலை மோதி வருகிறார்கள்? ‘அய்யா, சாமி... எப்படியாவது அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று மன்றாடுவதற்காக வருகிறார்கள். ஆரம்பத்தில் அமெரிக்காவாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபர்கள் வந்தனர். அடுத்து, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிசிங்கர் வந்தார். அமெரிக்க நிதி அமைச்சர் பால்சன் வந்தார். இன்னும் பல குடுகுடுப்பைக்காரர்கள் வர இருக்கிறார்கள்.

இப்படி வருகிறவர்களெல்லாம் எங்கே போகிறார்கள்? பி.ஜே.பி. தலைவர் அத்வானி இல்லம் செல்கிறார்கள். ராஜ்நாத் சிங்கைச் சந்திக்கின்றனர். ‘அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை எதிர்க்காதீர்கள். ஆதரவு தாருங்கள்’ என்று மணிக்கணக்கில் வாதம் செய்கிறார்கள்.

‘உடன்பாட்டின் பல அம்சங்கள் இந்திய நலனுக்கு எதிரானவை. அவற்றை நீக்குங்கள்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீக்கமாட்டார்கள். அந்த அம்சங்களும் நிபந்தனைகளும் இந்தியாவை அமெரிக்காவின் துணை கிரகமாக்கும் சூத்திரக் கயிறுகளாகும்.

பாவம், டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதர் முல்போர்டு இன்னும் பி.ஜே.பி. கவுன்சிலர்களைத்தான் சந்திக்கவில்லை.

இந்த வாரம் நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைசுடன் தொடர்பு கொண்டார். ‘உடன்பாட்டில் இந்தியாவிற்குப் பாதகமான அம்சங்கள் இருப்பதாக அச்சம் நிலவுகிறது. ஆகவே, உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார் மறுத்து விட்டார். ‘மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்ட உடன்பாட்டில் இனி எந்த மாற்றமும் இல்லை’ என்று அவர் தெளிவாகத் தெரிவித்து விட்டார்.

எப்படியும் அந்த உடன்பாட்டை இந்தியாவின் தலையில் இறக்கி வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அமெரிக்க அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, தற்போது தங்கள் நாட்டில் அணுமின் உலைகளை நிறுவுவதில்லை. நியூயார்க் அருகே லாங் ஐலண்டில் அமெரிக்கா அணுமின் உலைகளை நிறுவ முயன்றது. ஆபத்து வாசலுக்கு வருகிறது என்பதனை அறிந்த நியூயார்க் மக்கள், அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது அந்தத் திட்டம் அரை குறையாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை அமெரிக்கா 90 அணு உலைகளை மூடியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் புதிதாக அணுஉலை தொடங்கப்படவில்லை.

இருக்கவே இருக்கிறது இந்திய குப்பைத் தொட்டி என்று, இப்போது அமெரிக்க மக்கள் புறக்கணிக்கும் அணுமின் உலைகளை இங்கே நிறுவ விரும்புகிறார்கள். அதற்கு மன்மோகன் சிங் வழி வகுத்து விட்டார்.

இப்போது அமெரிக்காவில் அணுமின் உலைகளின் உற்பத்தி பெரிதும் பாதித்திருக்கிறது. அதிலிருந்து மீள்வது மட்டும் அதன் நோக்கம் அல்ல. இன்னும் பல ஆழமான அரசியல் காரணங்கள் உண்டு.

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு வாங்க, பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யர் முயன்றார். அதனை அமெரிக்கா அன்றும் எதிர்த்தது. இன்றும் எதிர்க்கிறது. அமெரிக்க நிர்ப்பந்தத்தின் காரணமாக மணிசங்கர் அய்யர் பெட்ரோலியத் துறையை இழந்தார். ஆனாலும் ஈரான் எரிவாயுத் திட்டம் இன்னும் மரித்துவிடவில்லை. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தாதே என்று இந்த வாரம் கூட அமெரிக்கா நம்மை எச்சரித்திருக்கிறது. ஏனெனில், எரிவாயு மூலம் மின் உற்பத்தி செய்வது மலிவு. அணுமின் உலைகள் மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகச் செலவாகும். எனவே, ஈரான் எரிவாயுத் திட்டத்தை முடக்கும் நோக்குடன் அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டைத் துரிதப்படுத்துகிறது. ஈரானுக்கு எதிராக இந்தியாவை நிறுத்த முயல்கிறது.

இன்னொரு பக்கம் நமது அணுமின் உற்பத்தித்துறை விஞ்ஞானிகள் ஓசையின்றி அற்புதமான சாதனை செய்து வருகிறார்கள். இந்தியா அணுகுண்டு சோதனை செய்த போது, அமெரிக்கா நமக்கு யுரேனியம் விற்பதை நிறுத்தியது. உடனே நமது விஞ்ஞானிகள் தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் உற்பத்தியைத் தொடர்ந்தனர். கல்பாக்கம் அணுமின் நிலையம்கூட தோரியத்தால் இயங்கியது. இதனைக் கண்ணுற்ற பிரெஞ்சு விஞ்ஞானி ‘அணுமின் உற்பத்தியில் புதிய புரட்சி’ என்று பாராட்டினார். உண்மைதான்.

வேறு எந்த நாடும் தோரியத்தைப் பயன்படுத்தி இதுவரை அணுமின் உற்பத்தி செய்யவில்லை. இந்தியாதான் அந்தச் சாதனையைச் செய்தது. ‘இப்போது நமது அணுசக்தித் துறை விஞ்ஞானிகள் அந்த ஆராய்ச்சியில் வெகு தூரம் முன்னேறியிருக்கிறார்கள். நற்பலன்களை அளிக்கும் அந்த ஆராய்ச்சி முழு வெற்றி பெறும்போது இன்னும் ஏழு ஆண்டுகளில் மின் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும்’ என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுகிறார். இப்படி இங்கேயே கற்பகத் தரு வளர வாய்ப்பு இருக்கும் போது, அமெரிக்க எட்டி மரம் நமக்கு எதற்கு?

ஆனால், தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் உற்பத்தி செய்யும் இந்தியத் திட்டத்தை அமெரிக்கா முடக்க முயற்சிக்கிறது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏதோ நமக்கு மின்சாரம் உற்பத்தி செய்து தருகிற திட்டம் என்றுதான் வெளித்தோற்றத்திற்குத் தெரியும். ஆனால், அந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்க ராணுவக் கூட்டணிக்குள் சுண்டியிழுக்கின்ற சூட்சுமக் கயிறாகும். அதனால்தான் அதனை நாட்டுப்பற்றுள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். இந்திய விஞ்ஞானிகள் எதிர்க்கிறார்கள்.

‘தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணுமின் உலைகளை நம்மால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளில் நிறுவ முடியும்’ என்கிறார் அப்துல் கலாம். ஆனால், அந்தத் திசையில் இதுவரை மைய அரசு சிந்திக்கவேயில்லை. என்றைக்கு மன்மோகன் சிங் அரசு பதவி ஏற்றதோ, அந்த நாளிலிருந்து அமெரிக்க அணு உலைகளைத்தான் பாராயணம் செய்து கொண்டிருக்கிறது. சொந்தக் கால்களில் நிற்க நமக்கு வல்லமை இருக்கும்போது, அமெரிக்கா தரும் ரப்பர் கால்களில் நாம் ஏன் நிற்க வேண்டும்?

அடுத்தகட்டமாக அணுசக்தி உடன்பாட்டை ஏற்கிறாயா இல்லையா என்று அமெரிக்கா நம்மை மிரட்டும். ஏதோ அந்த நாட்டின் வழித்தடத்தில் நாம் பயணம் செய்யப் பாத்தியப்பட்டிருக்கிறோம் என்ற தோற்றத்தை மைய அரசே ஏற்படுத்தி விட்டது.

‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற வேண்டுமானால், அமெரிக்க ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்று கிசிங்கர் சொல்கிறார். ஒப்பந்தம் கைவிடப்பட்டால் நம்பகத்தன்மையே போய்விடும் என்று சிலர் கிசுகிசு பிரசாரம் செய்கிறார்கள். உறுதிமொழியைக் காப்பாற்றாத பிரதமர் என்று மன்மோகன் மீது பழிச் சொல் வரும் என்கிறார்கள்.

நடந்து போன தவறைத் திருத்திக் கொள்ள மைய அரசும் முயற்சிக்கிறது. அதனால்தான் உடன்பாட்டில் சில மாறுதல்களைக் கோருகிறார் பிரணாப் முகர்ஜி.

‘அணுசக்தி உடன்பாட்டோடு பயணம் முடிவதில்லை’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார். நல்லது. அமெரிக்கா நமக்கு மாட்டியிருக்கும் கறுப்புக் குல்லாவைக் கழற்றி எறிய வேண்டும்.

Saturday, November 3, 2007

ராமர் பாலம் பற்றி தொ.பரமசிவன்

தொன்மை வாய்ந்த ராமர் பாலத்தை இடித்து, சேது சமுத்திரத் திட்டத்தை
அமல்படுத்தக்கூடாது என எதிர்ப்புக்குரல்கள் இப்போது உச்சத்தில்
இருக்கின்றன. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பாலமா, மணல் திட்டா என்ற
விவாதத்தில் தொன்மைகளுக்கு எவ்வளவு தூரம் இடமிருக்கிறது? என தமிழ்ப்பேராசிரியரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள்தமிழ்த்துறை தலைவருமான தொ.பரமசிவனிடம் கேட்டோம்.

''சேது என்பது வடமொழிப் புராணங்களின் படி, இந்தியாவின் தென்எல்லை.
வடவேங்கடத்திலிருந்து தென்குமரி வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைஎன்றெல்லாம் நாம் குறிப்பிடுவதைப் போல பழங்காலத்தில் வடநாட்டவர்கள் பயன்படுத்திய வார்த்தைதான் இது. இந்த எல்லை வரையறை வெறும் புராண மரபுகளின்படிதான் சொல்லப்பட்டு வந்ததே தவிர, இது அறிவியல் ரீதியான முடிவு அல்ல. இமயமலை முதல் சேது வரை உள்ள பகுதிகள்தான் இந்தியா என்றால், சேதுவுக்கு அப்பால் பரந்து விரியும் மதுரை, திருநெல்வேலி_ வைகை, தாமிரபரணி நதிகள் எல்லாம் வேறு நாட்டிலா இருக்கின்றன? அந்தக் காலத்தில் சேதுவைப் பற்றியும் இந்தியாவின் எல்லைகள் பற்றியும் வடநாட்டவர்கள் இப்படித்தான் புரிந்து வைத்திருந்தார்கள்.

புவியியல் ரீதியாக இந்தியாவின் உண்மையான எல்லை குமரிமுனைதான் என்பது 20_ம் நூற்றாண்டில்தான் பெருவாரியான வடஇந்திய மக்களுக்குத் தெரியும்.
இந்தத் தெளிவு பிறப்பதற்கு முன்னால் வடநாட்டவர்களிடம் காணப்பட்ட தவறான நம்பிக்கைகளை இப்போது ராமர் பால விவகாரத்தில் ஆதாரங்களாகக் கொள்வது ஏற்புடையதல்ல. வரலாற்றுக்கு ஆதாரங்கள் உண்டு. தொன்மத்தை மட்டுமே தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவை புராணக்கதைகள். சிவனின் திருமணத்துக்கு வந்த கூட்டத் தைத் தாங்க முடியாமல் வடக்குப்பகுதி தாழ்ந்து, தெற்குப்பகுதி உயர்ந்தது; தென்பகுதியைச் சரி செய்ய அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார்
என்பது வரலாற்றுச் செய்தி அல்ல. இந்தத் தொன்மக் கதையை நாம் உண்மையென்று நம்ப முடியுமா? ராமர் பாலம் கட்டினார் என்ற புராணக் கதையையும் இப்படித்தான் அணுகவேண்டும்.

அது ராமர் பாலமா, மணல் திட்டா என்ற விவாதத்தில் தொன்மங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தினாலும்கூட, தமிழர்களின் ராமருக்கும் வடநாட்டவரின் ராமருக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் இருக்கின்றன. கம்பர் எழுதிய ராமாயணம் ராமர் பிறந்ததில் ஆரம்பித்து, அவருக்குப் பட்டாபிஷேகம் நடப்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் வடமொழியில் எழுதப்பட்ட பெரும்பாலான ராமர் கதைகளில் சீதையை நிலம் பிளந்து விழுங்குவதும், ராமர் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதும் தான் முடிவு. ராமர் தற்கொலை செய்துகொள்வதாகக் காட்டுவது நம் மரபுக்கு உவப்பானதாக இருக்காது என்றுதான் கம்பர் அந்த முடிவைப் பயன் படுத்த வில்லை. தமிழில் ராமரின் முடிவைப் பாடிய ஒரே ஒரு புலவர் பாரதியார் மட்டும்தான். 'பலர் புகழும் ராமனுமே ஆற்றில் விழுந்தான், பார் மீதில் நான் சாகாதிருப்பேன் கண்டீர்' என்று பாரதியாரால்தான் பாட முடிந்தது.

தமிழகத்தில் ஒன்றாகவும் வடஇந்தியாவில் இன்னொன்றாகவும் சொல்லப்படும் தொன்மத்தைச் சாட்சியாக ராமர்பாலம் பிரச்னையில் பயன்படுத்த முடியாது'' என்கிறார் தொ. பரமசிவன்..

நன்றி: குமுதம்

Friday, November 2, 2007

ஹென்றி கிஸ்ஸிங்கரின் மிரட்டல்

முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதன் படி உடனடியாக ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை இந்தியா கொணர்வதற்கான திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமாம். ஏனெனில் ஈரான் ஒரு ரவுடி நாடாம். இதை அமெரிக்க காட்டுமிராண்டிகளில் ஒருவர் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இன்னமும் அணுசக்தி உடன்பாடு கையெழுத்துகூட ஆகவில்லை அதற்குள்ளாக இப்படி ஒரு மிரட்டலை அதுவும் ஒரு முன்னாள் செயலாளர் ஒரு இந்திய அமைச்சருக்கு விடுத்துள்ளார். இது வெட்கக்கேடான செயல். இது இந்திய சுயசார்பு கொள்கைகளுக்கு சவால்விடும் செயல்.

அமெரிக்காவின் விருப்பம் இந்தியா என்றென்றும் அமெரிக்காவை சார்ந்தே வாழ்க்கை நடத்த வேண்டுமென்றதே. மானமுள்ள தேசப்பற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இந்திய ஈரான் எரிவாயு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஆதாரம் : http://www.hindu.com/2007/11/01/stories/2007110162211600.htm

Friday, October 26, 2007

123 அமெரிக்க கெடு

ஒரு வழியா ஆட்சிக்கு பயந்து நம்ம காங்கிரஸ் கட்சி அணு ஆயுத ஒப்பந்தத்தை
கைவிடனும்கற முடிவுக்கு வந்துடுச்சிம். இந்த நேரத்துல வடிவேலு பானியில அமெரிக்க
நாடு இந்திய நாட்டுக்கு ஒரு கெடு விதிச்சிருக்கு. இந்த வருட கடைசி வரை டைம்
கொடுக்கறேன். அதுக்குள்ள ஒப்பந்தத்துல கையெழுத்து போடுங்கன்னு.

எதற்காக அந்த நாடு இவ்வளவு அவசரப்படனும்னு எனக்கு விளங்க மாட்டேங்குது. இல்லை
ஒரு வேளை அந்த நாளுக்குள்ள கையெழுத்து போடலைன்னா திரும்பவும் ஒரு ஆறு மாசம்
கெடு கொடுக்கும் போல இருக்கு. ஏன்னா இதுல அந்த நாட்டுக்கு இந்த ஒப்பந்தம் மூலமா
இந்தியாவை எந்த அள்வுக்கு சுரண்டலாம்ங்கற கணக்கு தெரிஞ்சி இருக்கு. ஆனா இந்த
காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன பின் வாசல் லாபமோ இப்படி விவாதம் எதுவும் இல்லாம
இந்த ஒப்பந்தத்தை நிறைவேத்த கங்கனம் கட்டிக்கிட்டு அலையறாங்க. இதுமாதிரியான
நீண்ட கால ஒப்பந்தங்களுக்கு ஜனநாயக நாட்டில் உயரிய அமைப்பான பாராளுமன்றத்துல
ஒரு விவாதம், ஒரு ஓட்டெடுப்பு இல்லாம காரியம் சாதிச்சிடலாம்னு நினைச்சா அதுக்கு
பெயர் ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரம். அதுக்கு உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு
என்கிற போலி முகமூடி தேவையில்லை. அமெரிக்காவும் ஜனநாயகம் எங்கெங்கே
செத்துட்டாலும் அங்கன நாங்க உயிர் கொடுப்போம்னு அலையறாங்க. அவங்களுக்கு
இந்தியாவுல நடக்கற சர்வாதிகார ஆட்சி கண்ணுக்கு தெரியலையோ? இல்லை தெரிஞ்சும் சுய
லாபத்துக்காக கண்டுக்காம அமைதியா இருக்கோ எதுவும் புரியலை.

ஒன்னு மட்டும் புரியுது சுமார் 25 வருடத்துக்கும் மேலா எந்த ஒரு அணு
மின்னுலையையும் நிறுவாத நாட்டிலிருந்து அதன் மேல நம்பிக்கை இழந்த நாடு கூட நாம
ஒப்பந்தம் போடுவது அவங்களுக்கு ஒரு சோதனை சாலையை ஏற்படுத்திக்கொடுக்கதான்னு.
அதுக்கு ஆதரவா ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் கூட்டம் ஒன்று இங்கு சுற்றுப்பயணமே
மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு அவர்களின் நலன் மட்டுமே பெரிசா தெரியுது. என்னடா
ஒரு நூறு கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை இப்படி அணிசாரா நாடுங்கற அந்தஸ்துல
இருந்து இந்தியாவை மாத்தி போர் அபாயத்துல சிக்க வச்சி(ஏன்னா அமெரிக்கா
இந்தியாவை சீனாவுக்கு எதிரான சக்தியாதான் பாக்குதாம் - கண்டு சொன்னவரு அறிவு
ஜீவி சோ. இராமசாமி அவர்கள்) அவங்க அமைதியை கெடுக்க துணை போகறோமேங்கற உறுத்தல்
கொஞ்சமும் அவங்களுக்கு இல்லை. அது மட்டுமில்லை அமெரிக்கா எந்த நாட்டின் மீதாவது
நடவடிக்கை எடுத்தா நாம உற்ற தோழனா தோள் கொடுக்கனுமாம். அவங்க சுயநலத்துக்கு
யார்மேலாவது படையெடுத்தா சம்மந்தமில்லாம இந்தியன் போயி சாகனுமாம். அவங்களுக்கு
இப்ப நாம இருக்கற அமைதியான நிலை பிடிக்கலை போல இருக்கு.

அப்புறம் அமெரிக்க தேசத்துக்கு மட்டுமே எனர்ஜி செக்க்யூரிட்டி அப்படின்னு
சொல்லற ஆற்றல் பாதுகாப்பு வேண்டுமாம். நாம ஈரான் கூட அமெரிக்க குறுக்கீடு
மற்றும் தரகுத்துவம் இல்லாமல் பாகிஸ்தான் வழியா எரிவாயு வாங்க கூடாதாம் அதனால்
நம்ம எனர்ஜி செக்யூரிட்டி அதிகமாயி நம்முடைய சுயசார்பு அதிகமாயிடுமாம். இதனால்
வருகின்ற பணத்தை வச்சி ஈரான் அணு ஆயுதம் தயாரிச்சி அமெரிக்கா மேல போடுமாம். இது
முற்றிலும் தோல்வியடைஞ்ச சி.ஐ.ஏ. வின் புதிய கட்டுக்கதை. திரைக்கதை, வசனம்,
டைரக்ஷன், இசையமைப்பு மற்றும் இத்யாதி இத்யாதி பலகலை மன்னன் ஆல் இன் ஆல்
அழகுராஜா புஷ். இதை பத்தி ஜுனூன் புகழ் கேசவ் கல்சி என்ன சொல்றாரு - "அது வந்து
தாத்தா சார் அமெரிக்கா சார் என்ன சொல்லறாருன்னா ஈரான் எரிவாயு திட்டத்தை
இந்தியா கைவிடனும் அப்படின்னு."

அதுக்கு மாற்றா சவுதி அராபியாவுல இருக்கற ஷெல் நிறுவன கட்டுப்பாட்டுல இருக்கற
எரிவாயு வள இடத்தில இருந்து கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியா தலையை
சுத்தி மூக்கை தொட்டு அப்புறமா சாப்பிடறா மாதிரி ஒரு திட்டம் இருக்காம்.
அதுக்கு இந்தியா பணம்போட்டு ஸ்பான்ஸர்பன்னி அதை கொல்கொத்தாவரை அமைச்சி
பராமரிச்சி அதுக்கும் அந்தாண்ட இருக்கற இந்தோநேசியா வரை அந்த பழுப்பை
கொண்டுபோயி ஷெல் நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிக்க வழி செய்து கொடுக்கனுமாம்.
என்ன இந்திய வரி கட்டுவோரே உங்க பணம் எங்க போவுதுங்கற அக்கரை உங்களுக்கு
இருந்தா கொஞ்சமாச்சும் அந்த உணர்வு இருந்தாக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தை
எதிர்க்கின்ற குழுவுல இப்பவேஇணைஞ்சிக்கங்க.

இதெல்லாம் தேச நலன்களாம்.(ஒரு வேளை அமெரிக்க தேச நலனோ). இதை
எதிர்ப்பவர்களெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத எதிரிங்களாம்.(ஷெல்
நிறுவன வளர்ச்சிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்
அருமை மகாஜனங்களே. ரிலையன்ஸுக்கு போட்டு கொடுத்தாலாவது பணம் இந்தியாவுலையே
சுத்திக்கிட்டிருக்கும். ஆனா நம்ம பணத்துல வெளிநாட்டுகாரனுக்கு பைலைன்
போட்டுக்கொடுத்து அவன் வளந்துக்குவானாம். நாம லாலிபாப் சாப்பிட்டு
திருப்தியடைஞ்சிக்கனுமாம். என்ன கொடுமை மகாஜானம்சார் இது.)

இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் நமக்கு தேவையா?

Sunday, September 30, 2007

கியூபா வழியில் கேரளம்

இது 10.10.2007 பசுமை விகடனில் வந்த கட்டுரை.


இனி இயற்கை விவசாயம்தான்...

க்யூபா வழியில் கேரளா!

சரியான திட்டமிடலே பாதிவெற்றிக்குச் சமம் என்பார்கள். அந்த வகையில் தெள்ளத்தெளிவான கொள்கைகளுடன் அதிகாரப்பூர்வமாக இயற்கை விவசாயம் என்கிற பாதையில் வேகமாக அடி எடுத்து வைத்திருக்கிறது கேரள மாநிலம்.



கம்யூனிஸ தேசமான க்யூபா, ஒரு பக்கம் அமெரிக்கா வின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், முழுக்க இயற்கை விவசாயம் என்பதையும் கையில் எடுத்துக் கொண்டு உலகையே வியக்க வைத்துக்கொண்டுள்ளது. அதேபாணியில், இங்கே கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்திலும் இனி இயற்கை விவசாயம்தான் எங்கள் கொள்கை என்று வீரமுழக்கமிட்டிருக்கிறார் மாநில முதல்வர் அச்சுதானந்தன்.


மாநிலத்தின் இயற்கை விவசாயக் கொள்கையை வடிவமைக்கும் வகையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது மாநில பயோ டைவர்சிட்டி போர்டு. இதற்காக தமிழகம், கர்நாடகம் உட்பட இந்தியா முழுக்கவிருந்து இயற்கை விவசாய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி யாளர்களும் அங்கே குவிந்தனர்.

காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மாநில முதல்வர் அச்சுதானந்தன் வந்து சேரவில்லை. சரி, நிகழ்ச்சி நடந்த மாதிரிதான் என்று நாம் நினைத்தால்... சட்டென்று கூட்டத்தை துவக்கிவிட்டனர் ஏற்பாட்டாளர்கள்.

எல்லோரையும் வரவேற்றுப் பேசிய, பயோ டைவர்சிட்டி போர்டு தலைவர் விஜயன், இந்தியாவிலேயே முதல் முறையாக பல்லுயிர் சூழலைப் பாதுகாக்க பயோ டைவர்சிட்டி போர்டு என்கிற அமைப்பு கேரளா மாநிலத்தில்தான் தொடங்கப்பட்டது. இயற்கை அளித்தவற்றையெல்லாம் வறட்டு கௌரவத்துக்காக நாம் அழித்துவிடக் கூடாது. பாரம்பரியமான விவசாய முறைகளையும், லாபம் தரும் தொழில்நுட்பங்களையும் விவசாயி களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை விவசாயம் என்ற பாதையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் விரைந்துகொண்டுள்ளன. அதேபோல கேரளாவிலும் இயற்கை விவசாயத்தை விரைவுபடுத் துவதற்காக நம்முடைய முதல் அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் எல்லா வகையிலும் உதவிகளை வழங்கிவருகிறார்கள்’’ என்று பேசிக்கொண்டிருக்கும் போதே முதல்வர் அச்சுதானந்தன் மேடைக்கு வந்து சேர்ந்தார்.

(போலீஸாரின் பூட்ஸ் சத்தம்... அதிகாரிகளின் பரபரப்புக் குரல்கள்... தொண்டர்களின் உற்சாகக் கூச்சல் என்று எதுவும் இல்லாமல் ஏதோ தெருமுனை டீ கடைக்கு பேப்பர் படிக்க வந்தவர் போல் தனி ஆளாக அவர் வந்து சேர்ந்ததது... தமிழகத்திலிருந்து போயிருந்த நமக்கு பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கவே செய்தது).

உடனடியாக மைக் பிடித்த முதல்வர், ‘‘இந்தியாவில் இயற்கை விவசாயம் என்றால்... கேரளா என்று சொல்லும் நிலை ஏற்படவேண்டும். நம் மாநிலத்தில் உள்ள மண்ணையும், மக்களையும் காப்பாற்ற இயற்கை விவசாயம்தான் ஒரேவழி. பல நுறு ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த பாரம்பரியங்கள் அழியத் தொடங்கியுள்ளன. பொக்காலி நெல்லும், செம்மீனும் இன்று போன இடம் தெரியவில்லை. மண், காற்று, நீர் என எல்லா இடங்களிலும் விஷம் கலந்துவிட்டது. இதை நினைத்தால் வேதனையில் நெஞ்சு விம்முகிறது. விஷமில்லாத மாநிலமாக கேரளத்தை உருவாக்க எல்லாவகையிலும் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும்.


இனி விவசாயம் ஜெயிக்குமா? என்று இந்தியா முழுக்கவே விவசாயிகளிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் தைரியம் கொடுத்து, நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.

இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தத் தொழில் நுட்பத்தையும் கேரளா வுக்குள் அனுமதிக்க மாட்டோம். பி.டி. எனப்படும் மரபணு மாற்று விதைகள் சூழலுக்கு வேட்டு வைக்கக்கூடியவை. மறந்தும் கூட அதை எங்கள் எல்லையில் நுழைய விடமாட்டோம் என்று முழங்கிய முதல்வர் அச்சுதானந்தன்,

அறிஞர் பெருமக்கள் எல்லாம் இரண்டு நாட்களாக இங்கே ஆலோசனை நடத்தி, வகுத்து தரவிருக்கும் இயற்கை விவசாயக் கொள்கைகளை அமல்படுத்த நான் தயராக இருக்கிறேன்’ என்று உறுதிகூறி அமர்ந்தார்.

அடுத்து, டெல்லியில் இயங்கிவரும், உயிரி தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு என்ற அமைப்பை சேர்ந்த டாக்டர் தேவேந்தர் சர்மா... ‘‘நாடு முழுக்க கடன் தொல்லை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதைத் தடுக்க அரசுத் தரப்பில் எந்தவிதக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், மரபணு மாற்றபட்ட விதைகளை எப்படி விவசாயிகளின் தலையில் கட்டுவது என்று விஞ்ஞானிகளும், அரசு அதிகாரி களும் கூட்டம் போட்டுப் பேசிக்கொண்டே இருக் கிறார்கள்’’ என்று அரங்கை அதிரவைத்தார்.

இரண்டாம் நாள் காலையில் தமிழகத்தில் நடக்கும இயற்கை விவசாயம் குறித்து படங்களுடன் பேசத் தொடங்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.

‘‘தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நிலத்தையே ஆராய்ச்சிக் கூடமாக்கி, புதுப்புதுக் கண்டுபிடிப்பு களை செய்து வருகிறார்கள். இயற்கை விவசாயம் மாநிலம் முழுக்க விவசாயிகளால் ஓர் இயக்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒற்றை நாற்று நடவு என்பதை எங்கள் மாநிலத்தில் ஒரு புரட்சியாகவே செய்து வருகிறார்கள். ஒரு தூரில் 100 கிளைகள் வெடிக்கின்றன. இதிலிருந்து 250 கிராம் நெல் மணிகள் விளைந்திருக்கின்றன. இந்த அதிசயத்தை நாகப்பட்டிணத்தில் உள்ள விவசாயி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

ரசாயன இடுபொருட்கள் இல்லாமல் இயற்கை முறையிலேயே விளைச்சலைக் கூட்டு வதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் கைவசம் உள்ளன. அமுதபானி (அமிர்த கரைசல்) பஞ்சகவ்யா, இ.எம். பூச்சிவிரட்டி என்று நிறைய இருக்கின்றன. எல்லா வற்றையும் விவசாயிகளே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள்’’ என்று சுருக் கமாகப் பேசியவர், இயற்கை விவசாயத்தில் வெற்றிப்பெற்ற தமிழக விவசாயிகளின் புகைப்படம் மற்றும் வீடியோ படங்களைக் காட்டிவிட்டு அமர்ந்தார் நம்மாழ்வார்

பெங்களூரு, காந்தி வேளான் அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர்.பிரகாஷ் பேசும்போது, ‘இந்தியாவில் முதல் முறையாக இயற்கை விவசாயக் கொள்கையை 1995ம் ஆண்டே கர்நாடகா அரசு செயல்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசு, இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு செல்வதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங் களோடு சேர்ந்து வேலை செய்கிறது. ஒவ்வொரு தாலூகாவிலும் ஒரு விவசாயப் பண்ணையை உருவாக்கி வருகிறது அரசு. அங்கே இயற்கை முறையில் விளைவிக் கப்பட்ட பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவி லிருக்கும் லால்பாக் பூங்காவில் ஒரு கடை தனியாக செயல்பட்டு வருகிறது. முழுக்க இயற்கை விவசாயம் சார்ந்த மாநிலமாக கர்நாடகாவை மாற்றுவதற்கு எல்லா வகையிலும் மாநில அரசு நடவடிககை எடுத்து வருகிறது என்று சொல்லி கூட்டத்தினர் அனைவரையும் வியக்க வைத்தார்.

இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில், ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மாடு, ஒரு எருமை ஆகியவற்றை வழங்கவேண்டும் என்பது தொடங்கி, ரசாயன உரம் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதையும், தெளிப்பதையும் மாநிலத்தில் முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்பது உட்பட 24 வகையான கொள்கைகள் உருவாக்கப் பட்டன.

எல்லாவற்றையும் செயல்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்று முதல் நாள் காலையிலேயே முதல்வர் அச்சுதானந்தன் பச்சைக்கொடி காட்டிவிட்டுச் சென்றதால், அடுத்த வரும் ஆண்டுகளில் கேரள மாநிலம் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கப் போகிறது என்ற நம்பிக்கையோடு அனைவரும் கலைந்தனர்.

கடைசியாக நம்மிடம் பேசிய நம்மாழ்வார், இங்கே அரசே இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலாவது அரசு விழித்துக் கொண்டால், இந்தியாவிலேயே இயற்கை விவசாயத்தில் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் தட்டிச்சென்றுவிடும் என்று ஆதங்கத்துடன் சொன்னவர்,

அரசு இறங்கி வராவிட்டாலும் விவசாயி களே இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதைச் சாதித்துவிடுவார்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

Tuesday, September 25, 2007

மருத்துவக் கொலைகள்

கடந்த வாரம் மருந்து வாங்க சென்றிருந்தேன். மருந்தின் விலையை கேட்டு தலை சுற்றிப்போனேன். காரணம் 1 மாதத்தில் மருந்தின் விலை 25% ஏறி இருந்தது. காரணம் என்ன என்று விசாரித்தால் மருந்து கடைக்காரர் சராசரியாக எல்லா மருந்துகளும் இந்த அளவுக்கு விலை ஏறியுள்ளது. இன்னமும் ஏறலாம் என்றார். காரணம் உற்பத்தியாளர்களே விலையை ஏற்றியதுதான். அவர்களுக்கு ஏன் இந்த விலையை ஏற்றத்தோன்றியது? அதுவும் பல ஆண்டுகளாக விற்று வரும் ஒரு மருந்தின் விலையை?

>உற்பத்தி செலவு ஏறியதா?
>போக்குவரத்து செலவு ஏறியதா?
>வரிகள் உயர்ந்தனவா?
>மொத்த விலைவாசி ஏறியதா?
>தேவைப்பாடு அதிகரித்ததா?

உற்பத்தி செலவு ஊதிய உயர்வுகாரணமாகவும், மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் ஏறும். ஆனால் மொத்த விலைவாசி உயர்வே 6 மாதமாக 6%தான் உயர்ந்தது என்பது மத்திய அரசு பஞ்சப்படியை 6% உயர்த்தியதிலிருந்தே தெரிகிறது. ஒரு மாதத்தில் அப்படி விலையேறி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக உற்பத்தி + போக்குவரத்து செலவுகள் 10% கீழாகவே இருக்கவேண்டும். வரிகள் உயர்ந்துவிடவில்லை. தேவைப்பாடு நிலையாக அதே அளவுதான் உள்ளது.

பின்னர் ஏன் விலையேற்றம்? இது உற்பத்தியாளர்களே தன்னிச்சையாக லாப நோக்கில் ஏற்றிய விலைதான் என்பது நிதர்சனமாக தெரிகின்றது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் ஆராய்ச்சிக்காக அதிக அளவு செலவு செய்தனராம். சரி ஆராய்சிக்காக அதிக அளவு செலவு செய்திருந்தால் புதிய மருந்துகள் அல்லது உற்பத்தியை துவங்கி 5 ஆண்டுகளுக்குள்ளாக உள்ள மருந்துகள்தான் விலையேறி இருக்க வேண்டும். ஆனால் 10-15 ஆண்டுகளாக விற்பனை செய்து கொண்டிருக்கும் மருந்துகள் ஏன் ஏற வேண்டும்? இன்னுமா அவர்கள் Break Even Point ஐயே எட்டவில்லை? ஆனால் இவர்களின் பங்குகள் பங்கு சந்தையில் குவிக்கும் லாபம் மிக அதிகம்.

சமீபத்தில் மருந்துகளின் மீதான கட்டுப்பாட்டினை மத்திய அரசு மருந்து சட்டத்திருத்தம் மற்றும் காப்புரிமை சட்ட திருத்தம் மூலமாக விலக்கிக் கொண்டது. இதன் விளைவாக ரேபிஸ் மருந்துக்கான விலை அடுத்த மாதமே இரண்டு மடங்காகிவிட்டது. அதாவது 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைப்பதில்லை. ஏழைகள் இது போன்ற மருந்துகளை காசு கொடுத்து வாங்கும் நிலையி இல்லை. நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோர் மாத ஊதியமாக 600 ரூபாய் கூட பெறுவதில்லை என்பது அரசின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் வெறி நாய்க்கடிக்கு ஆளானால் அவர்களின் நிலை? மருந்து வாங்க பணமில்லாததால் மரணிக்க வேண்டியதுதான்.

கொலை என்றால் என்ன? உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுவது அல்லது பறிக்கப்படுவது.

இங்கு நோயாளி இருக்கிறார்,
மருந்து இருக்கிறது,
வைத்தியம் பார்க்கும் மருத்துவர் இருக்கிறார்,
மருத்துவமனைகள் இருக்கிறது.

ஆனால் நோயாளியிடம் மருந்து வாங்க பணமில்லை. அதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இங்கு அந்த நோயாளியின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. இதை கொலை என்று சொல்லாமல் என்ன சொல்ல? இன்னுமொரு கொடுமை என்னவென்றால் இவ்வாறு இறப்பவர்களின் இறப்பு சான்றிதழில் நாய்க்கடியால் இறந்துபோனார் என்று சொல்லப்படுவதால் இந்தவகை மருத்துவ கொலைகள் வெளியில் தெரிவதில்லை. மாறாக மருந்து வாங்க பணமில்லாததால் மரணமடைந்தார் என்று சான்றளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டால் இதுபோன்று நாடு முழுவது நடக்கும் மருத்துவ கொலைகளின் பட்டியல் வெளிவரும். அதில் அதிர்ச்சிகள் நிறைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

என்ன கொடுமை சார் இது?

Thursday, September 20, 2007

விலகிச் செல்லும் ஆரோக்கியம்!

நன்றி : ரவிக்குமார் எம்.எல்.ஏ.
பத்திரிக்கை : ஜூனியர் விகடன்,23.09.2007 இதழ்.

விலகிச் செல்லும் ஆரோக்கியம்!


ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு ‘உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஒரு வீடு’ என்றுதான் பதில் சொல்வோம். இந்தப் பட்டியலில் ‘நல்ல மருத்துவ வசதி’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் சட்டத்தில் அப்படி வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் அதுவலியுறுத்தப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள், ‘கட்டாய கிராமப்புற சேவை’ என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். ‘கிராமங்களுக்கு சென்று பணியாற்றுவதில் தங்களுக்கு எவ்வித மறுப்பும் இல்லை’ என்று அவர்கள் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்ததைப் பார்த்தபோது, ‘அடடா? நமது டாக்டர்கள் எவ்வளவு நல்லவர்கள்!’ என்று எண்ணத் தோன்றியது. மத்திய அரசும்கூட கிராமப்புற மக்களின் ஆரோக்கியத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களோ வேறுவிதமாக இருக்கின்றன. அரசின் இந்த அக்கறை உண்மைதானா?

1991 க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து இந்த வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதுமிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை


18,671 ஆகும். அது எட்டாவது ஐந்தாண்டுத்திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால், 1997-2002 க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களே புதிதாக உருவாக்கப்பட்டன. அடுத்ததாக வந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திலோ நிலைமை இன்னும் மோசமாகி வெறும் 394 ஆரம்ப சுகாதார நிலையங்களே கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோலவே ‘கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்கள்’ மற்றும் ‘சப் சென்டர்’களின் எண்ணிக்கையிலும் பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்ற கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்களை ஒரு லட்சம் பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைத்தால்கூட, இப்போது இருப்பதுபோல இரண்டு மடங்கு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இருக்கின்ற மருத்துவ மையங்களிலும் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது தனிக்கதை. அவற்றில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களைப் பற்றிக்கேட்கவே வேண்டாம்.

முப்பதாயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று வைத்துக் கொண்டால்கூட, இப்போதுள்ளவை போதாது. சுகாதாரத் துறையை மைய அரசு இப்படிப் புறக்கணித்து வருவதால், அரசு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் தனிநபர் வருமானத் தின் பெரும்பகுதி, தனியார் மருத்துவமனைகளிடம் கொட்டப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிற சொத்தை விற்றோ, கடன் வாங்கியோதான் தனது மருத்துவத் தேவையை ஒருவர் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல். ஆந்திர மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு அவர்களின் மருத்துவ செலவுக்காகப் பெற்ற கடன்களும் ஒரு காரணம்.

‘நமது உடல்நலத்தை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?’ என்ற எண்ணத்தில் யாரும் இதுபற்றி அதிகம் பேசுவதில்லை. சுகாதார வசதிகளைச் செய்து கொடுத்துதான் தீரவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாம் வாதாட முடியுமா? அதற்கு நமக்கு அதிகாரம் உள்ளதா? இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். நிச்சயமாக நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்த முடியும். சர்வதேச அளவில் பொது சுகாதாரம் குறித்து உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ஐ அத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு குடிமகனது உயிர்வாழும் உரிமையும், தனிமனித சுந்திரமும் காக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரிவு வலியுறுத்துகிறது.

‘‘உயிர்வாழ்வதற்கான உரிமை என்பதில் மருத்துவ வசதியைப் பெறுவதற்கான உரிமையும் உள்ளடங்கி இருக்கிறது, எனவே, அதை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை’’ என மொஹிந்தர் சிங் சாவ்லா என்பவர் பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருந்தும். இதுமட்டுமின்றி, ஒரு நோயாளிக்கு சரியான நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சையை ஒரு அரசு மருத்துவமனை வழங்காவிட்டால், அது அந்த நோயாளியின் உயிர்வாழும் உரிமையை மீறியதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

இந்தியாவில் நிலவும் மோசமான சுகாதார நிலையைக் கணக்கில் கொண்டுதான் 2002ம் ஆண்டு ‘தேசிய சுகாதாரக் கொள்கை’ ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரத் தேவைக்கென செலவிடப்படும் தொகை மிகவும் குறைவாக இருப்பதை அப்போது ஒப்புக்கொண்ட அரசு, 2010ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த செலவில் (ஜி.டி.பி.) இரண்டு சதவிகிதத்தை சுகாதாரத்துக்கென ஒதுக்கப்போவதாக உறுதியளித்தது. ஆனால், குறைந்தது ஐந்து சதவிகித நிதியை இதற்காக ஒதுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பல காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஒதுக்கப்படும் நிதி, ஒரு சதவிகிதம்கூட இல்லையென்பது வேதனைக்குரியதாகும்.

யுத்தத்தால் சீரழிந்து போயிருக்கும் இலங்கை அரசாங்கம்கூட, பொது சுகாதாரத்துக்காக இந்தியா வைப் போல இரண்டு மடங்கு செலவிடும்போது, இந்திய அரசு இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது!

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் குறைந்த அளவு நிதி ஒதுக்கீட்டால் சுகாதாரத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க நமது மருத்துவர்களின் அலட்சியமும், பொருள் ஈட்டுவதில் அவர்கள் காட்டும் ஆர்வமும் ஏற்படுத்தும் கேடுகள் எண்ணிலடங்கா. ‘‘கிராமப்புறங்களில் இருந்துதான் நாங்கள் வந்திருக்கிறோம். கிராமங்களுக்குப் போவதில் எங்களுக்குத் தயக்கமில்லை’’ என மருத்துவ மாணவர்கள் சொன்னபோதிலும், யதார்த்த நிலை அப்படியில்லை.

‘‘தமிழ்நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர் களில், சுமார் எழுபது சதவிகிதத்தினர் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். தனியார் மருத்துவமனைகள் பெரும் பாலும் நகரப்பகுதிகளில்தான் உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் சுமார் பத்தாயிரம் அலோபதி டாக்டர்கள் உள்ளனர். சென்னைப் பகுதி யில் எண்ணூறு பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். ஆனால், தமிழகம் முழுவதும் 1,590 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையே காணப்படுகிறது’’ என்று 2005ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மருத்துவ வசதிகளில் தற்போது நகர மற்றும் கிராமப் பகுதிகளுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுக்கு இது ஓர் உதாரணம்.

நாட்டின் பொது சுகாதார அமைப்பு மோசமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள், தனியார் மருத்துவ மனைகளை நாடிச்செல்வதைப் பார்க்கிறோம். அப்படிப் போவதால் தனியார் மருத்துவ சேவை சிறப்பாக இருக் கிறது என்று அர்தமாகிவிடாது. அரசு மருத்துவர்கள் தனியே பிராக்டிஸ் செய்வது தடை செய்யப்படாத காரணத்தால், தனியார் மருத்துவமனைகளோடு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சில அரசு மருத்துவ நிபுணர்கள், தம்மிடம் வரும் நோயாளிகளை அந்தத் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்படி நிர்ப்பந்திக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத அத்தகைய தனியார் மருத்துவமனைகள் பணம் பறிக்கும் மையங்களாகவே செயல்படுகின்றன. சட்டவிரோத கருச்சிதைவுகள் தொடங்கி, உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்குப் புறம்பான எல்லா காரியங்களுக்கும் அவை இடமளிக்கின்றன.

மிகப்பெரும் வணிக மையங்களாக உருவெடுத்து வரும் தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகளுக்கு அரசாங்கமும் பலவிதங்களில் உடந்தையாக இருக்கிறது. இதற்கு ஒரேயரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களைப் பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரணங்களை வரிச் சலுகை பெற்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவிகிதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக வாக்குறுதி அளித்தே இந்தச் சலுகைகளை அந்த மருத்துவமனைகள் பெற்றுள்ளன. அதேபோல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் இப்படி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக செய்யப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு தனியார் மருத்துவமனையும் இந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை.

இது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில ளித்துப் பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர், ‘‘சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறைகளை மாநில அரசுகள்தாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்தாலும், மருந்து விலைகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. ‘காட்’ ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்திய சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களின் விளை வாக மருந்து விலைகள் பலமடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசே காரணம். தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரெய்டு நடத்தியது போல, தனியார் மருத்துவமனைகளிலும் அதிரடி சோதனை செய்து, இலவச மருத்துவ வசதி தொடர்பான வாக்குறுதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்டறிந்தால் என்ன? அவற்றில் மேற்கொள்ளப்படும் வருமான வரி சோதனைகளைவிட முக்கியமானதல்லவா இது? அத்துடன் இப்படி சலுகைகள் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலையும், அவை பெற்றுள்ள சலுகைகளையும் தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களிடமும் இதுபற்றி ஒரு விழிப்பு உணர்வு ஏற்படும்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் அதன் பொருளாதார வலிமையில் மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் அடங்கியுள்ளது. தமது குடிமக்களை நோய்களுக்கு பலியாக்கிக்கொண்டு, தான் வலிமையோடு இருப்பதாக ஒரு அரசு மார்தட்டிக்கொள்ள முடியாது. இதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக ‘மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ்’ செய்வதற்கு திட்டம் ஒன்றை மாநில அரசு உருவாக்கிட வேண்டும். தேசிய அறிவுசார் ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் இப்போது செயல்வடிவம் பெறவுள்ளன. அதுபோல மத்திய அரசு ‘தேசிய சுகாதார ஆணையம்’ ஒன்றை உருவாக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை போன்ற சிறப்பு மருத்துவமனைகளை முதல்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளிலாவது துவக்கு வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

வளர்ச்சி + வறுமை = புரட்சி

நன்றி : ஜென்ராம், ஜூனியர் விகடன், 19.09.2007

அமைதியான சமூக மாற்றத்தை சாத்தியமில்லாமல் செய்பவர்கள், ஒரு வன்முறைப் புரட்சியைத் தவிர்க்க முடியாதபடி உருவாக்கி விடுகிறார்கள்' என்ற வாசகத்தை அவர் அறிந்திருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், அப்படி ஒரு அர்த்தம் தொனிக்கும் வகையில்தான் அவர் பேசி இருக்கிறார்.

''நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல. இந்த இடைவெளி எப்போதெல்லாம் அதிகரித்ததோ, அப்போதெல்லாம் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது'' என்று வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் சி.ஆர்.ரவிச்சந்திரன் பேசி இருக்கிறார். கடந்த 8ம் தேதி சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் 'வருமான வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளை எப்படி அணுகுவது' என்ற தலைப் பில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வழக்கமாக அரசியல் தலைவர்கள்தான் இதுபோலப் பேசுவார்கள். அதுவும் ஏழ்மையில் இருக்கக்கூடிய மனிதர்களுடைய வாக்குகளைக் குறி வைத்துப் பேசுவார்கள். ஆனால் இங்கு ஓர் அதிகாரி பேசி இருக்கிறார். இது வரவேற் கத்தக்க ஒரு மாற்றம்தான்! அதே சமயத்தில், பொருளாதார ஏற்றத் தாழ்வு மட்டுமே சமூகப் புரட்சிக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. பொருளாதார மற்றும் உற்பத்தி உறவுகளில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் புரட்சியைத்தான் அவர் இங்கே குறிப்பிட்டாரா என்பதும் விவாதத்துக்கு உரிய கேள்வியாகிறது. ஏனெனில், நாம் வாழும் சமூகத்தில் எது புரட்சி, எது கலகம், எது அராஜகம் என்ற வேறுபாடு பெரும் பான்மையான மக்களுக்குப் புரிந்திருக்கவில்லை.

''கலகங்கள் வெற்றி பெற்றால்

புரட்சி என்பார்கள்;

புரட்சி தோற்றுப் போனால்

கலகம் என்பார்கள்!''

என்ற கவிதை வரிகள் இங்கே நினைவில் கொள்ளத்தக்கவை!

எனவே, வருமான வரித்துறை ஆணையர் சொன்ன 'புரட்சி' என்ற சொல்லை விட்டுவிடுவோம். ஆனால், அவர் என்ன சொல்ல விரும்பியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலான இந்திய மக்களிடம் 'அமைதியின்மை' இருக்கிறது என்பதே அவருடைய பேச்சின் உட்பொருள்.


அது உண்மைதான்! திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் போன்றவற்றையும் 'அமைதியின்மை'யின் வெளிப்பாடுகள் என்று சொல்லலாம்.

இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம்? ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர் கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தப் பிளவு, சமூகத்தின் அமைதிக்கு இடையூறாக இருக்கிறது. இந்த இருதரப்பில் அரசு கோடீஸ்வரர் களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதன் காரணமாகவே நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டங்களை நோக்கி மக்களை உந்தித் தள்ளும் முக்கியமான நிகழ்வு என்ன? பத்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் நிலத்தை, வசித்த வீட்டை, பார்த்துக் கொண்டிருந்த வேலையை லட்சக்கணக்கான மக்கள் இழக்க நேர்கிறது என்பதுதான்!

பத்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக நம்முடைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்யும் பெரிய அணைகள், ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் நிலத்தை கையகப்படுத்தும் தொழிலகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் சுரங்கம், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா வளாகங்கள் போன்றவை நம்முடைய வளர்ச்சிக்கு அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. சுதேசி தொழில்கள் நசிந்துப்போய் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக இருக்கும் பன்னாட்டு மூலதனம் தங்கு தடையின்றி இந்தியாவுக்குள் வருவதற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு பாதிக்கப் படும் மக்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக, நிலம், வேலை, குடியிருப்பு ஆகியவற்றை இழக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடிபார்க்க முடிகிறது.2006 ஜனவரி யில் ஒரிசா மாநிலத்தில் கலிங்காநகர் என்னும் இடத்தில் டாடா எஃகு ஆலைக்காக நிலம் கையகப்படுத்தப் படுவதை எதிர்த்து பழங்குடியினர் சாலை மறியலில் இறங்கினர். நவி மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30,000 விவசாயிகள் திரண்டனர். மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மகாராஷ்டிரா, ஹரியானா, ஒரிசா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 'வளர்ச்சித் திட்டப்' பணிகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். ஆந்திராவில் நிலம் கோரி இடதுசாரிகள் தலைமையில் போராட்டம்நடக்கிறது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் மக்கள் போராட்டங்களைத் தவிரவும் பல வகைகளில் மக்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பு எல்லாம் முறைப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பாக வெளிப்படவில்லை. இருந்த போதிலும் மக்களுடைய எதிர்ப்பைக் கண்டு அரசு தயங்குகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கப்படும் நிலத்தின் அளவைக் குறைத்தல், பாதிக்கப்படுவோரின் மறுவாழ்வு என்று சில நடவடிக்கைகளை எடுக் கிறது. இவை போதுமானவையாக இல்லை என்பதால் போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்களை எல்லாம் அந்தந்த மாநில அரசாங்கங்களும் கடுமையாக ஒடுக்குகின்றன.

போராட்டங்களை ஒடுக்குதல் என்பதற்குக் காவல் துறை நடவடிக்கை என்று மட்டும் பொருளல்ல. கோடிக்கணக்கான பணச் செலவில் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள், அந்த விளம்பரம் பெற்ற நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் போராட்டச் செய்திகளை ஊடகங்கள் மறைத்தல் மற்றும் திரித்தல், அரசு திடீரென்று கண்டுபிடித்து பயன்படுத்தும் சொற்கள் எல்லாமே ஒடுக்குதலின் பகுதிகள்தான். திடீரென்று ஏவப்படும் 'சொல்' அடக்குமுறை என்றால் என்ன என்று நீங்கள் கேட்கக்கூடும். ஓர் அணை கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் பாதிக்கப் படும் குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் 'திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று அரசு அங்கீகரிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்களை, 'ஆக்கிரமிப்பாளர்களாக' அரசு அறிவித்து விடுகிறது. அவர்கள் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதை அரசு அப்போதுதான் 'கண்டறிகிறது'!

வளர்ச்சி மற்றும் பொதுநன்மை கருதி அந்தப் பகுதியில் பாதிக்கப் படுவோர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று 'வளர்ச்சி'யின் ஆதரவாளர்கள் உபதேசம் செய்கிறார்கள். இந்தக் கருத்தை அரசும் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. இந்த கருத்தை அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மிகவும் எளிய கணக்கு மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 100 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக 1 லட்சம் பேர் கஷ்டப்பட நேர்ந்தால் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய அறிவுரை! பாதிக்கப்படுவோரின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொத்தே அவர்கள் குடியிருக்கும் வீடு அல்லது நிலம் அல்லது வேலையாகத்தான் இருக்கும். அதை இழந்தாலும் அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம்!

இவர்களுடைய இந்த வாதத்தை சற்றே திருப்பிப் போடுங்கள். அம்பானி, டாடா உள்ளிட்ட இந்தியாவின் முதல் ஓராயிரம் பணக் காரர்களின் சொத்துக்களை 100 கோடிப் பேரின் நலனுக்காக கையகப் படுத்தலாமா என்று கேளுங்கள். இந்தக் கேள்வி காதில் விழுந்த அடுத்த நொடி, 'வளர்ச்சி'க்கு ஆதரவாக பேசுபவர்கள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள்!

Wednesday, September 12, 2007

சீனாவிற்கு எதிரான சக்தியாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கிறது

கீழே இருசாய்வு கோடுகளுக்கு இடையில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தி சோ அவர்களின் பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள்

//அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும், நாம் அணு ஆயுதச் சோதனை செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் தானாகவே செல்லாததாகிவிடாது. முதலில் விளக்கம் கேட்கப்படும். பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு-வார்த்தை மேற்கொள்ளப்படும். அன்றைய சந்தை நிலவரப்படி நஷ்டஈடு தரப்பட வேண்டும். பல கட்டங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் ரத்தாவது பற்றி முடிவாகும். இதற்கென்று ஏகப்பட்ட ஷரத்துக்கள் உள்ளன. ஆசியக் கண்டத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக இந்தியா உருவெடுப்பதில் அமெரிக்காவுக்கு லாபங்கள் அதிகம். அமெரிக்கா நம்முடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பிற நாடுகளும் நம்முடன் அணு ஆற்றலைப் பகிர்ந்துகொள்வது சாத்தியப்படும். தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கும் இதில் ஆதாயங்கள்தான் அதிகம் என்பது என் கருத்து! அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள், நமது அருணாசலப்பிரேதசத்துக்கு சீனா உரிமை கோருவதைப் பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? இந்த அண்டை நாடு ஏற்கெனவே நமது பிராந்தியங்கள் சிலவற்றை கையகப்படுத்திக்கொண்டு இன்னும் ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. இது நமது நாட்டின் இறையாண் மையைப் பாதிக்காதா! கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பு முழு சந்தர்ப்ப வாதம்!''//

மேற்கண்ட சோவின் பார்வையில் எனக்கு சில சந்தேகங்கள். கற்றறிந்த பெரியோர் சரியான சமதானம் கூறவும்.1. ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு போட்டியாக இந்தியாவை அமெரிக்கா பார்க்கின்றது: இதில் சீனாவுக்கு போட்டி நாடு என்றால் எந்த வகையில்? தொழில் ரீதியாகவா? ராணுவ ரீதியாகவா? தொழில் ரீதியாக என்றால் ஆரோக்கியமான போட்டி. நம் நாட்டிற்கு ஏகப்பட்ட லாபங்கள். ராணுவ ரீதியாகவெனில் நம் நாட்டிற்கு ஏகப்பட்ட கஷ்டங்கள். அமெரிக்காவின் அடியாளாக, சீனத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு நம் இந்திய சிப்பாய்களை பலியாக்க அமெரிக்கா விரும்ப அதற்கு பிரதமர் அவகளும் ஒத்துப்போவது ஒட்டுமொத்த ராணுவத்தையும் வலிந்து போருக்கு பயன்படுத்தவே என்பதல்லவா அதன் உள்ளர்த்தம். "சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக" இந்த வார்த்தைகள் இந்தியா சீனாவிடையே சமாதான பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஒரு தீர்வாக அமையாமல் எல்லாவற்றிற்கும் ராணுவம் மூலம் தீர்வு கண்டுகொள்ளலாம். நீ என்னுடன் இரு நான் உன் ராணுவத்திற்கு எல்லா ஆயுத உதவியும் செய்கிறேன். சீனாவுடன் சண்டையிட்டுக்கொண்டே இரு. எல்லா இழந்த பகுதிகளையும் மீட்டுக்கொள்ளலாம் என்று சண்டையை மூட்டிவிடுவதாக அல்லவா இருக்கின்றது. ஏற்கெனவே இதே வாக்குறுதிகளை கொடுத்து பாகிஸ்தானை காஷ்மீர் விவகாரம் மூலம் தூண்டி இன்று மதவாத தீவிரவாதத்தை இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேசம் முழுமைக்கும் தினித்தது. அதற்க் இன்றுவரை மும்பை முதல் ஹைதராபாத் வரை பலியாகிக்கொண்டுதானே இருக்கின்றது. இதே போன்ற மதவாதத்தை ஹிந்து பௌத்தம் என்கிற பிளவுக்கிடையில் தினிக்க அமெரிக்கா முயல்கிறதா? இது எதிர்காலத்தில் நிகழாது என்பதற்கு என்ன உத்தரவாதத்தை, இந்தியா சீனா இடையே ராணுவ மோதல்கள் போட்டி ராணுவ மனப்பான்மையால் ஏற்படாது என்பதற்கான உத்தரவாதத்தை பிரதமர் அவர்கள் தருவாரா? அமெரிக்கா சீனாவுக்கு எதிரான சக்தியாக இந்தியாவை பார்கிறது என்பதற்காகவே நம் இந்திய அரசும் எதிரான சக்தியாகவே பார்க்க வேண்டுமா? நமக்கென்று சுய அயலுறவுக்கொள்கையே இல்லையா? நட்புநாடாக்கி நம் வியாபாரங்களை, கலாசார உறவுகளை சீனாவுடன் மேம்படுத்த இந்தியாவால் முடியாதா? ராணுவ நடவைக்கையாலன்றி தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இழந்த பகுதிகளை மீட்க முடியாதா? விடுதலைப்புலிகளுக்கு பேச்சு நடத்தி உங்கள் பகையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறும் அமெரிக்கா இந்தியாவுக்கு, சீனாவுக்கு அந்த அறிவுரையை கூறாமல் எதிரான சக்தி நாடாக கருதும் மர்மம் என்ன? பாகிஸ்தானுடன் நல்லுறவு சாத்தியமாகும்போது சீனாவுடன் முடியாதா? அந்த கோணத்தில் இந்திய தலைமை ஏன் சிந்திக்க மறுக்கிறது. இந்தியாவை இன்னொரு இஸ்ரேலாக்க அமெரிக்கா முயற்சிக்கின்றது. 150 கோடி மக்களுக்கும் 107 கோடி மக்களுக்கும் இடையில் பகைமை தீயை அமெரிக்கா முயல்கிறது. நாம் ஏன் அதற்கு இறையாக வேண்டும்? அமெரிக்க ஆயுத ஆத்ரவு பாகிஸ்தானால் இந்தியாவில் நாம் காஷ்மீரில் இழந்த பகுதிகளால் ஏற்பட்ட இறையாண்மை பாதிப்பு, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரவு தீவிரவாதிகள் பாராளுமன்றத்தை தாக்கியபோதும் தொடர்ந்து நட்புக்கரம் நீட்டி பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கும்போது ஏற்படாத இறையாண்மை பாதிப்பு சீனாவுடன் வியாபாரம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தி தொடர்ந்த பேச்சு வார்த்தைகள் மூலம் இழந்த் பகுதிகளை மீட்க முயற்சியெடுக்கும்போது மட்டும் ஏற்படும் என்பது எந்த வகை சிந்தனையில் சேர்த்தி? இவையெல்லாம் தேசபக்தியற்ற அமைதியை அறவே விரும்பாத இந்த சின்னதன புத்தியுள்ள மனிதனின் சிந்தனையில் தோன்றிய கேள்விகள். கற்றறிந்த பெரியோர் யாரேனும் இந்த சந்தேகங்களை போக்கி அமைதியான உலகத்தை படைக்க உதவி செய்யுங்களேன்.

Wednesday, September 5, 2007

சில்லரை வியாபாரத்தில் பெரும் நிறுவனங்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தி வரும் காய்கறி வியாபரத்தை உடனே மூடவேண்டுமென்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உணவுப்பொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகுறிப்பு இங்கே கிடைக்கும் http://satrumun.blogspot.com/2007/07/blog-post_8116.html.

முதலில் மலிவு விலை காய்கறி வியாபாரம் என்கிற முகமூடியோடு களத்தில் இறங்கிய ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனம் இப்பொழுது சிறிது சிறிதாக ஏகபோக கொள்முதலில் ஈடுபட்டு காய்கறிகளை ஒட்டுமொத்தமாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்கிறது. பின்னர் இது அந்த பகுதி குளி பதன களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 4 வகைகளாக பிரித்து கீழ்கண்ட முறையில் விற்பனை செய்கிறது.

முதல் வகை காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது.(உள்ளூரில் கிடைக்கும் விலையை விட வெளிநாட்டில் விலை அதிகம் கிடைக்கின்றது. அதனால் உள்ளூரில் விலை ஏறினாலும் அவர்களுக்கும் அரசுக்கும் அதைபற்றிய கவலை எதுவுமில்லை)

இரண்டாம் வகை காய்கறி அந்த காய்கறி கிடைக்காத இந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.(இதனால் பிரதான உணவுப்பொருளாக அதை பயன்படுத்தும் உள்ளூரில் விலையேற்றம், வெளி மாநிலத்திலும் அதிக விலையில் விற்றுக்கொள்ளலாம்)

மூன்றாம் வகை காய்கறி உள்ளூர் ரிலையன்ஸ் ஃபிரஷ் அங்காடிகள் மூலம் விற்பனை(இது சந்தை விலையைவிட 1 ரூபாய் அல்லாது 2 ரூபாய் குறைவு என சொல்லப்படுகிறது. இவர்களின் ஏகபோக கொள்முதலால் சந்தையில் தேவைப்படு அதிகரித்து சந்தைவிலை ஏறிவிடுகிறது. பின்னர் என்ன ரிலையன்ஸ் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளிடமிருந்து ஏகபோக கொள்முதல் செய்து அதை குளிர் பதன களஞ்சியத்தில் சில நாட்களுக்கு பதுக்கிவைத்தி்ருந்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. இது உணவுப்பதுக்கல் சட்டப்படி குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு இயந்திரம் கையூட்டுபெற்றுக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது.

உதாரணமாக கடந்த மாதம் 3 ரூபாய்க்கு விற்ற கிலோ தக்காளி இன்று 32 ரூபாய்க்கு சந்தையில் விற்கிறது. கடந்த மாத ரிலையன்ஸ் விலை ரூ6 இந்த மாத ரிலையன்ஸ் விலை ரூ 30. இந்த தக்காளி கடந்த மாதம் ரூ4 க்கு வாங்கப்பட்டிருப்பதாக கொண்டால் பதுக்கலுக்காக அதன் குளிர்பதன களஞ்சிய செலவு உள்பட அதன் தற்போதைய கிலோ விலை ரூ6 க்கு மட்டுமே பிடிக்கும். ஆனால் விற்பனை விலை 30. லாபம் ரூ24. இதுதான் பகற்கொள்ளை மற்றும் உணவுப்பொருள் பதுக்கல் என்று 1960 களில் சொல்லிக்கொண்டிருந்தானர். இந்த முறை வணிகத்தினால் இந்தியா 1930 முதல் 1970 இல் பசுமைப்புரட்சி வரை பாதிக்கப்பட்டு வறட்சி மற்றும் பட்டினிசாவை சந்தித்துக்கொண்டிருந்தது. பின்னர் அரசு எல்லாவற்றையும் ரேஷன் கடைகளில் விற்க தொடங்கிய பிறகு பெரும் வணிகர்களில் ஏமாற்றுவேலை மற்றும் பதுக்கல் வணிகம் முடிவுக்கு வந்தது. இப்பொழ்து மீண்டும் பதுக்கல் வணிகம் புதிய பெயரில் புதியா அவதாரம் அரசின் ஆதரவுடன் அமுலுக்கு வந்துள்ளது.

நான்காம் வகை காய்கறி (அழுகலுக்கு சற்று முந்திய நிலையில் இருப்பது) ஹோட்டல்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Sunday, September 2, 2007

புதிய பொருளாதாரமும் வறுமைகோடும்

தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர் உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசாயகூலிகள், உள்கட்டமைப்பு துறையில் பணிபுரிதல் மற்றும் ஒப்பந்த தொழில், மீன்பிடித்தல், நெசவு என்று பல்வேறுபட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39.4 கோடிபேர்(80%) தினக்கூலியாக வெறும் ரூ.20 மட்டுமே(அரை டாலருக்கும் கீழ்) பெறுகின்றனர். தேசத்தின் வளர்ச்சி எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை என்று தேசிய முறைசாரா தொழிலாளர் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கை பற்றிய செய்திகள் கிடைக்கும் இடங்கள் http://economictimes.indiatimes.com/8_out_of_10_working_Indians_earn_less_than_Rs_20_a_day/rssarticleshow/2272128.cms http://www.hinduonnet.com/thehindu/holnus/002200708100324.htmபுதிய பொருளாதார கொள்கைகள் 1991 இல் அறிவிக்கப்பட்டது. தேசத்தில் 1990 ல் மாத சம்பளம் ரூ.500கீழ் வருமானம் பெறுவோர் வறுமைக்கோடின் கீழ் வாழ்வதாக அரசு அன்று அறிவித்தது. அது இன்றளவும் அதே அளவுதான் உள்ளது. அதனால் இன்று வெறும் 24%(தோராயமாக 24 கோடி பேர்) மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக அரசு பெருமையுடன் சொல்லிவருகிறது. இதை தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் சரியான அளவுகோளாக இருக்கும். 1990 இல் ஒரு கிராம் தங்கம் ரூ.250 மட்டுமே. எனவே அன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் 2கிராம் தங்கம் வாங்க முடியும். அப்படியென்றால் இன்று இரண்டு கிராம் தங்கம் ரூ1650 க்கு விற்கப்படுகின்றது. எனவே விலைவாசிப்புள்ளியுடன் ஒப்பிடும்போது இன்று ரூ1600 க்கு கீழ் சம்பளம் பெறுவோர் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்தானே? ஏன் இந்திய அரசு இதை உயர்த்த மறுக்கின்றது? ஏழ்மையை ஒழித்துவிட்டோம் என்று பசப்பவா? மேலே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் மக்கள் தொகையில் 40% பேர் மாத ஊதியமாக வெறும் ரூ600(விடுமுறை சம்பளம் எதுவும் கிடையாது எனவே விடுமுறைநாட்களை கழித்தால் இது இன்னும் குறையும்)க்கு கீழ் பெறுகின்றனர். அப்படியானால் அரசு கூறிய 24% பேர் புள்ளிவிவரம் ஒரு ஏமாற்றுவேலை என்றுதானே பொருள். ஆக மாத ஊதியம் 1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ 60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது. ஆகக்கூடி இந்திய அரசு புதிய பொருளாதார கொள்கையை ஏற்ற பின்னர் ஏழ்மை அதிகரித்துள்ளதுடன் ஏழை பணக்கார இடைவெளியும் அதிகரித்துள்ளது. சோஷலிச பொருளாதார காலத்தில் இந்த இடைவெளி தொழில்களின் தேசியமயமாதல் காரணமாக குறைந்து வந்துள்ளது. ஏழ்மையும், வறட்சியும் 1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக குறைக்கப்பட்டிருந்தது. ஏழைகள் பலர் கல்வி காரணமாக முன்னேற்றம் பெறத்தொடங்கினர். ஆனால் புதிய பொருளாதார கொள்கையில் ஏழைகள் புதியதாக உருவாகியுள்ளனர். இதுதான் இந்திய தேசம் வளர்கிறது(ஏழ்மையில்) என்று சொல்லப்படுகிறதோ?