Monday, March 17, 2008

தொடாமலேயே ஷாக் அடிக்கும்

சொன்னதும் சொல்லாததும்

பொதுப் பணித் துறையைப் பிரித்து, நீர் ஆதார நிறுவனம் உருவாக்கப்பட்டபோது ஏற்படாத ஐயமும் அச்சமும் மின்வாரியத்திலிருந்து "மின்சாரம் எடுத்துச்செல்லும் தனிஅமைப்பு' ஏற்படுத்தும்போது தோன்றுகிறது என்றால் - அதற்குக் காரணம் இல் லாமல் இல்லை.

"மின்வாரியத்தைத் துண்டாட மாட்டோம்; மின்சாரத்தை எடுத்துச் செல்லும் அமைப்பு தனியார்மயமாகாது' என்று கூறியுள்ள மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, "2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டம் வெளியான ஒராண்டுக்குள்ளாகவே மின்சாரம் எடுத்துச் செல்லும் பிரிவை தனியாக ஏற்படுத்தியிருக்க வேண்டும்' என்றும் கூறியிருக்கி றார்.

இதைச் சொன்னவர், அதே 2003-ம் ஆண்டின் மின்சாரச் சட்டம், ஜனவரி 2004-லிருந்து 5 ஆண்டுகளுக்குள், தனியாருக்கும் மின் விநியோக உரிமம் வழங்குவதை வகை செய்திருப்பதுடன், உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் கூறி யுள்ளதை ஏன் சொல்லவில்லை? மின்சாரம் எடுத்துச் செல்லும் அமைப்பை ஏற்படுத்துவதன் நோக் கமே, மின்விநியோகத்தைத் தனியார்மயமாக்க வகை செய்யும் முன் னேற்பாடுதான்.

மின்விநியோகத்தைத் தனியார் நிர்வகிப்பது புதிய விஷயமல்ல.

தொடக்கத்தில், தனியார்தான் மின்சாரத்தை அரசிடம் பெற்று மக்க ளுக்கு விநியோகிக்கும் ஏஜன்டுகளாக இருந்தனர். மின்விநியோ கத்தை மின்வாரியமே ஏற்றுக்கொண்ட போதும்கூட, கோவை மாநக ராட்சி 1995 வரையிலும்கூட, மின்வாரியத்திடம் மின்சாரம் பெற்று, மின்விநியோகம் செய்யும் தனிஅமைப்பாகவே நீடித்தது. இதனால், பக்கத்து ஊர்களான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள மின் கட்டணத்தைவிட (ஒரு யூனிட்டுக்கு 5 காசுகள்?) அதிகம் வசூலித்த தால், தொடரப்பட்ட வழக்கின் காரணமாக மீண்டும் மின்வாரியமே இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

ஆக, மின்விநியோகம் தனியார் நிர்வகித்திருப்பது புதிய விஷய மல்ல என்றால் ஏன் இந்த அச்சம் என்று தோன்றும். கோவை மாநக ராட்சியின் மின்கட்டணம் சிறிய அளவில் வேறுபடுவதை காண முடிந்ததால் நீதிமன்றத்தை அணுக முடிந்தது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் மின்விநியோகஸ்தர்கள், சிமென்ட் ஆலைகளைப் போல சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் வேறு பெயர்களில் கட்டணத்தை உயர்த்தினால் யாருக்குத் தெரியும்? முன்னர் மின்விநியோகத்திலும், பஸ் போக்குவரத்திலும் ஈடுபட்ட தொழிலதிபர்கள் நியாயமான லாபத்தை மட்டுமே எதிர்பார்த்தவர்கள்.

அவர்களில் ஒரு சிலர் அரசியல்வாதிகளாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய சூழலில், அரசியல்-சார்-தொழிலதிபர்கள் மட்டுமே தனி யார்மயமாகும் அரசுத் துறைகளை ஆக்கிரமிக்கும் பணவலிமை உள் ளவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுமைக்கும் அல்லது நகரங்கள் வாரியாக மின்விநி யோக உரிமத்தை ஒரே நிறுவனமோ, அல்லது ஒரே நிறுவனத்தின் பல பிரிவுகளோ, உள்-ஒப்பந்தமாகவோ எடுத்துக்கொள்வது அரசி யல்-சார்-தொழிலதிபர்களுக்கு மிக எளிமையான விஷயம்.
மின்சாரத்தை எடுத்துச் செல்லும் அமைப்பை தனியார் மயமாக்கி னாலும், அரசே நிர்வகித்தாலும் பெரிய வேறுபாடு இருக்காது. ஏனெ னில், மின்சாரத்தைக் கொண்டுசேர்க்க அனுமதிக்கப்படும் ஒரு சொற் பத் தொகை (வீலிங் சார்ஜ்) மட்டுமே அந்த அமைப்புக்குக் கிடைக் கும். ஆனால் மின்விநியோகம் அப்படியல்ல. லாபம் உள்ளடக்கிய தாக அரசு அனுமதிக்கும் கட்டணத்துடன் சேவைக் கட்டணம், கேபிள் பராமரிப்புக் கட்டணம், மிகைப்பயன்பாடுக்கான உபரி-கட்ட ணம், மீட்டர் பராமரிப்புக் கட்டணம் என புதுப்புது சொல்லாடல்க ளில் ஒவ்வொரு இணைப்புக்கும் குறைந்தது ரூ.10 வசூலித்தாலும் மொத்த லாபம் எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்பதை கணக்கிடுவது முடியாத செயல் அல்ல.

இதை நிர்வகிப்பவர்கள் அரசியல் பலம் (எதிர்க் கட்சி, ஆளும் கட்சி என்பது ஒரு விஷயமே அல்ல) உள்ளவர்கள் என்பதால் பொது மக்கள் கேள்வி கேட்கவும் முடியாது.
மின்சாரம் தொட்டால் ஷாக் அடிக்கும். தனியார் மின்விநியோ கமோ தொடாமலேயே ஷாக் அடிக்கும்.