Friday, November 2, 2007

ஹென்றி கிஸ்ஸிங்கரின் மிரட்டல்

முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதன் படி உடனடியாக ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை இந்தியா கொணர்வதற்கான திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமாம். ஏனெனில் ஈரான் ஒரு ரவுடி நாடாம். இதை அமெரிக்க காட்டுமிராண்டிகளில் ஒருவர் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.

இன்னமும் அணுசக்தி உடன்பாடு கையெழுத்துகூட ஆகவில்லை அதற்குள்ளாக இப்படி ஒரு மிரட்டலை அதுவும் ஒரு முன்னாள் செயலாளர் ஒரு இந்திய அமைச்சருக்கு விடுத்துள்ளார். இது வெட்கக்கேடான செயல். இது இந்திய சுயசார்பு கொள்கைகளுக்கு சவால்விடும் செயல்.

அமெரிக்காவின் விருப்பம் இந்தியா என்றென்றும் அமெரிக்காவை சார்ந்தே வாழ்க்கை நடத்த வேண்டுமென்றதே. மானமுள்ள தேசப்பற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன் இந்திய ஈரான் எரிவாயு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஆதாரம் : http://www.hindu.com/2007/11/01/stories/2007110162211600.htm

0 comments: